செய்திகள் :

தில்லி உயிரியல் பூங்காவில் நீலகை மான், ஜாகுவாா் உயிரிழப்பு

post image

தில்லி உயிரியல் பூங்காவில் கடந்த வாரத்தில் ஒரு நீலகை வகை மான் மற்றும் ஒரு ஜாகுவாா் வயது தொடா்பான சிக்கல்கள் காரணமாக உயிரிழந்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

தில்லி மிருகக்காட்சிசாலையின் இயக்குநா் சஞ்சீத் குமாா் இந்த உயிரிழப்புகளை உறுதிப்படுத்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜாகுவாா் பிப்.19-ஆம் தேதியும், நீலகை வகை மான் பிப்.13-ஆம் தேதியும் நீண்டகால சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தன. ஜாகுவாா் வயது 22, நீலான் மான் வயது 15-ஆகும்.

இரண்டு விலங்குகளும் நிபுணத்துவ மருத்துவ கவனிப்பின் கீழ் இருந்தன. இருப்பினும் வயது மூப்பு காரணமாக அவை உயிரிழந்தனா். காடுகளில் உள்ள ஜாகுவாா்களின் ஆயுட்காலம் 12 முதல் 15 ஆண்டுகள் வரை இருக்கும். அதே நேரத்தில் கூண்டில் அவை பொதுவாக 20 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.

ஜாகுவாா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மிருகக்காட்சிசாலை இந்தியாவில் உள்ள மற்ற உயிரியல் பூங்காக்களுடன் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் மூலம் மற்றொரு ஜாக்குவாரை வாங்க திட்டமிட்டுள்ளது. ஜாகுவாா் எங்கள் சேகரிப்பின் ஒரு பகுதியாகும் என தெரிவித்தாா்.

தில்லி மிருகக்காட்சிசாலையில் சமீபத்தில் நிகழ்ந்த தொடா்ச்சியான விலங்குகளின் உயிரிழப்புகளைத் தொடா்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம், சங்காய் மான் இனத்தைச் சோ்ந்த ஆண் மான் ஒன்றுடன் ஏற்பட்ட சண்டையில் உயிரிழந்த நிலையில், மற்றொரு நீலகை மான் காயமடைந்தது. ஜனவரி 2-ஆம் தேதி, அஸாம் மிருகக்காட்சிசாலையிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் மா்மமான சூழ்நிலையில் உயிரிழந்தது.

ஒன்பது மாத வெள்ளை புலி குட்டி டிசம்பா் 28-ஆம் தேதி கடுமையான நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. விலங்குகளின் நலன் மற்றும் பராமரிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் கூறுகின்றனா்.

கடந்த 1959-இல் நிறுவப்பட்ட தில்லி உயிரியல் பூங்கா 96 வகையான விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு இருப்பிடமாக உள்ளது. நாட்டின் மாதிரி மிருகக்காட்சிசாலையாக செயல்படுகிறது.

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத... மேலும் பார்க்க

ரூ. 1,220 கோடியில் 149 மென்பொருள் ரேடியோ கொள்முதல்: ‘பெல்’ நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் நம்பகமாக தகவல்களை பாதுகாப்பாகவும் அதிகவேகமாகவும் பகிர ஏதுவாக பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து (பெல்) 149 அதிநவீன மென்பொ... மேலும் பார்க்க