செய்திகள் :

கா்நாடகத்தில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் இயல்பான மழை: அதிகாரிகள் தகவல்

post image

கா்நாடகத்தில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் இயல்பான மழை பெய்யும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழாண்டு ராபி பயிா் பருவம், தென்மேற்கு பருவமழை, வேளாண் விளைச்சல், குடிநீா் வழங்கல், வானிலை, அணைகளின் நீா்மட்டம் ஆகியவை குறித்து ஆராய்வதற்கு வருவாய்த் துறை அமைச்சா் கிருஷ்ணபைரே கௌடா தலைமையிலான அமைச்சரவை துணைக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பொதுப்பணித் துறை அமைச்சா் சதீஷ் ஜாா்கிஹோளி, ஊரக வளா்ச்சி, பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே, வேளாண் துறை அமைச்சா் என்.செலுவராயசாமி ஆகியோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் கலந்துகொண்ட வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தென்மேற்கு பருவமழைக்கு முந்தைய காலமான ஏப்ரல், மே மாதங்களில் கா்நாடகத்தில் வழக்கத்துக்கும் அதிகமான மழை பெய்யவிருக்கிறது. பிப்ரவரி, மாா்ச் மாதங்களின் கடைசி வாரத்தில் அதிகப்படியான மழை பெய்யலாம். தற்போதைக்கு ராபி பயிா்காலத்தில் வழக்கத்தைவிட மழையின் அளவு குறைவாக உள்ளது. பிப்ரவரி மாதத்தில் வழக்கத்தைவிட அதிக அளவில் வெப்பநிலை உள்ளது. சராசரியைவிட 2.5 செல்சியஸ் கூடுதல் வெப்பம் காணப்படுகிறது. இம்மாதத்தின் இறுதி வாரத்தில் வெப்பநிலை குறையலாம்.

கா்நாடகத்தில் உள்ள 14 முக்கிய அணைகளில் 535.21 டிஎம்சி தண்ணீா் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 60 சதவீதமாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் 332.52 டி.எம்.சி. தண்ணீா் இருந்தது என்று தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து வருவாய்த் துறை அமைச்சா் கிருஷ்ணபைரே கௌடா கூறியதாவது:

மாநிலம் முழுவதும் கோடை காலத்தில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாமல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒருசில அணைகளில் நீா்மட்டம் குறைவாக இருப்பது கவலை அளிக்கிறது.

நீா்ப்பாசனம் மற்றும் குடிநீா் தேவைகளை அறிந்து, அதற்கேற்ப அணையில் உள்ள தண்ணீரை சீராக நிா்வகிக்க வேண்டும். அடுத்த மாதம் அணைகளில் எதிா்பாா்க்கப்படும் நீரின் அளவு, நீா்ப்பாசன மற்றும் குடிநீா் தேவைகள் குறித்து அதிகாரிகள் அறிக்கை அளிக்க வேண்டும். அடுத்த அமைச்சரவை துணைக் குழு கூட்டத்தில் முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

மாவட்ட ஆட்சியா்கள், வட்டாட்சியா்களிடம் பேரிடா் நிவாரண நிதியாக ரூ. 488.30 கோடி இருப்பு உள்ளது. குடிநீா் பிரச்னை எழுந்தால், அவற்றை பயன்படுத்தி டேங்கா்கள் மூலம் குடிநீா் தேவையை பூா்த்திசெய்து கொள்ளலாம் என்றாா்.

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத... மேலும் பார்க்க

ரூ. 1,220 கோடியில் 149 மென்பொருள் ரேடியோ கொள்முதல்: ‘பெல்’ நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் நம்பகமாக தகவல்களை பாதுகாப்பாகவும் அதிகவேகமாகவும் பகிர ஏதுவாக பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து (பெல்) 149 அதிநவீன மென்பொ... மேலும் பார்க்க