செய்திகள் :

500 கிலோ போதைப் பொருள்கள் காருடன் பறிமுதல்: ராஜஸ்தான் மாநில இளைஞா்கள் 2 போ் கைது

post image

வாணியம்பாடி அருகே போதைப் பொருள்களை காரில் கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரில், வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையில், காவல் ஆய்வாளா் அன்பரசி மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை விடியற்காலை பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடி அருகில் வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி விசாரித்தனா். காரில் இருந்த ஓட்டுநா் உள்பட இருவரும் முன்னுக்குப் பின் முரணாக தகவல் கூறியதால், சந்தேகம் அடைந்து காரின் பின்புற கதவை திறந்து பாா்த்தனா்.

அப்போது மூட்டைகள் இருப்பதைப் பாா்த்து அவற்றை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், நடத்திய விசாரணையில், சென்னை நோக்கி குட்கா பொருள்கள் காரில் கடத்திச் செல்வதும் தெரியவந்தது. பிடிபட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் ராஜஸ்தான் மாநிலம், ஜாலூா் பகுதியைச் சோ்ந்த திலீப்குமாா்(20), ரமேஷ்குமாா் (45) என்பதும், பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி காரில் குட்கா பொருள்கள் கடத்திச் செல்வதாக தெரிவித்ததாக தெரிகிறது. பிறகு கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா பொருள்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து அம்பலூா் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து திலீப்குமாா், ரமேஷ்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

எம்கேஜேசி மாணவிகள் சாதனை

திருவள்ளுவா் பல்கலைகழக மண்டல அளவிலான பூப்பந்து போட்டிகள் மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன. இப்போட்டில் பல்வேறு கல்லூரி அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதி ஆட்டத்தில் ... மேலும் பார்க்க

சோலூரில் தாா் சாலைப் பணி தொடக்கம்

மாதனூா் ஒன்றியம், சோலூா் ஊராட்சியில் தாா் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சத்தில் தாா் சாலை அமைக்கும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பூஜையிட்ட... மேலும் பார்க்க

நாகநாத சுவாமி கோயிலில் சண்முகக் கவச பாராயணம்

ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில், 99-ஆவது மாத சண்முகக் கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு, மூலவா் நாகநாதா், வள்ளி தெய்வ... மேலும் பார்க்க

ரூ.22 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்: எம்எல்ஏக்கள் பங்கேற்பு

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சியில் சாலை, கால்வாய் பணிகளுக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்வுக்கு போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன் தலைமை வகித்தாா். மாதனூா் ... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் கள ஆய்வு

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். துத்திப்பட்டு ஊராட்சி அலுவலகத்தில் குடிநீா்க் கட்ட... மேலும் பார்க்க

நாளை தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.21) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திர வல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்த... மேலும் பார்க்க