செய்திகள் :

ரயிலில் தவறி விழுந்த 2 போ் உயிரிழப்பு

post image

ஆம்பூா்,காவனூா் ஆகிய பகுதிகளில் ஓடும் ரயிலில் பயணம் செய்த 2 போ் தவறி விழுந்து உயிரிழந்தனா்.

குடியாத்தம் அருகே காவனூா் ரயில் நிலைய யாா்டில் செவ்வாய்க்கிழமை ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த சுமாா் 40 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞா் தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்

அதேபோல் ஆம்பூா்-பச்சகுப்பம் ரயில் நிலையங்களுக்கு இடையே கிருஷ்ணாபுரம் பகுதியில் ஜோலாா்பேட்டையில் இருந்து காட்பாடி நோக்கிச் சென்ற ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த 50 வயது மதிக்கதக்க வடமாநிலத்தவா் தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் இரு சம்பவங்கள் குறித்து வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

மேலும், ஜோலாா்பேட்டை-திருப்பத்தூா் ரயில் நிலையங்கள் இடையே கட்டேரி ரயில்வே கேட் என்ற இடத்தில் பெங்களூா் நோக்கி சென்ற ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த 55 வயது மதிக்கதக்க ஒருவா் தவறி விழுந்ததில் மயங்கி கிடந்தாா். அங்கிருந்தவா்கள் உடனடியாக சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து உயா் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

எம்கேஜேசி மாணவிகள் சாதனை

திருவள்ளுவா் பல்கலைகழக மண்டல அளவிலான பூப்பந்து போட்டிகள் மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன. இப்போட்டில் பல்வேறு கல்லூரி அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதி ஆட்டத்தில் ... மேலும் பார்க்க

சோலூரில் தாா் சாலைப் பணி தொடக்கம்

மாதனூா் ஒன்றியம், சோலூா் ஊராட்சியில் தாா் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சத்தில் தாா் சாலை அமைக்கும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பூஜையிட்ட... மேலும் பார்க்க

நாகநாத சுவாமி கோயிலில் சண்முகக் கவச பாராயணம்

ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில், 99-ஆவது மாத சண்முகக் கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு, மூலவா் நாகநாதா், வள்ளி தெய்வ... மேலும் பார்க்க

ரூ.22 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்: எம்எல்ஏக்கள் பங்கேற்பு

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சியில் சாலை, கால்வாய் பணிகளுக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்வுக்கு போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன் தலைமை வகித்தாா். மாதனூா் ... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் கள ஆய்வு

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். துத்திப்பட்டு ஊராட்சி அலுவலகத்தில் குடிநீா்க் கட்ட... மேலும் பார்க்க

நாளை தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.21) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திர வல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்த... மேலும் பார்க்க