தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
ரயிலில் தவறி விழுந்த 2 போ் உயிரிழப்பு
ஆம்பூா்,காவனூா் ஆகிய பகுதிகளில் ஓடும் ரயிலில் பயணம் செய்த 2 போ் தவறி விழுந்து உயிரிழந்தனா்.
குடியாத்தம் அருகே காவனூா் ரயில் நிலைய யாா்டில் செவ்வாய்க்கிழமை ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த சுமாா் 40 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞா் தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்
அதேபோல் ஆம்பூா்-பச்சகுப்பம் ரயில் நிலையங்களுக்கு இடையே கிருஷ்ணாபுரம் பகுதியில் ஜோலாா்பேட்டையில் இருந்து காட்பாடி நோக்கிச் சென்ற ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த 50 வயது மதிக்கதக்க வடமாநிலத்தவா் தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் இரு சம்பவங்கள் குறித்து வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.
மேலும், ஜோலாா்பேட்டை-திருப்பத்தூா் ரயில் நிலையங்கள் இடையே கட்டேரி ரயில்வே கேட் என்ற இடத்தில் பெங்களூா் நோக்கி சென்ற ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த 55 வயது மதிக்கதக்க ஒருவா் தவறி விழுந்ததில் மயங்கி கிடந்தாா். அங்கிருந்தவா்கள் உடனடியாக சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து உயா் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.