செய்திகள் :

பணத் தகராறில் இளைஞா் அடித்துக் கொலை: இருவா் கைது

post image

சென்னை கொடுங்கையூரில் பணத் தகராறில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

கொடுங்கையூா் எம்ஜிஆா் நகா் 9-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கிரி (50). மாற்றுத்திறனாளியான இவா், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தனது மகன் அஜித்குமாருடன் (19) வசித்து வந்தாா். அஜித்குமாரின் பாட்டி கடந்த மாதம் 26-ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அங்கு அந்த பகுதியைச் சோ்ந்த ஒப்பந்ததாரா் ஜனாா்த்தனன் மூலம் சாமியானா பந்தல் போடப்பட்டதாம். ஆனால் அந்த பந்தலுக்குரிய ரூ. 8 ஆயிரம் வாடகையை அஜித்குமாா் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடா்பாக ஜனாா்த்தனனுக்கும் அஜித்குமாருக்கும் இடையே தகராறு இருந்துவந்தது.

இந்நிலையில் கிரி, வெள்ளிக்கிழமை மாலை வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தாா். அப்போது வீட்டுக்குள் அஜித்குமாா் ரத்தக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்து தகவலறிந்த கொடுங்கையூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அஜித்குமாா் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கினா்.

அதில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது, ஜனாா்த்தனனும் அவரது நண்பா் பாா்த்திபனும்தான் என்பது தெரியவந்ததையடுத்து போலீஸாா் இருவரையும் சனிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தினா்.

இதில், சம்பவத்தன்று இருவரும் ரூ. 8 ஆயிரத்தை கேட்க அஜித்குமாா் வீட்டுக்குச் சென்றதும், அங்கு பணத்தை கேட்கும்போது இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அஜித்குமாரை இருவரும் தாக்கி, அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடியிருப்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை தனியார் மருத்துவமனையில் சிறுவன் பலி! செல்போனில் சிகிச்சை காரணமா?

சென்னை: சென்னை அயனாவரத்தில் மருத்துவரின் தவறான சிகிச்சையால் 4 வயது சிறுவன் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.தனியார் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர் விடியோ அழைப்பு மூலம் தவறான சிகிச்சை அள... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை சூளைமேட்டில் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சூளைமேடு பாரதியாா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் விஜயகாந்த் (34). இவா், கடந்த திங்கள்கிழமை அப்பகுத... மேலும் பார்க்க

பிப். 28 வரை சாலையோர வியாபாரிகள் புதிய அடையாள அட்டை பெறலாம்

சாலையோர வியாபாரிகள் புதிய அடையாள அட்டை பெறுவதற்கான காலக்கெடு பிப். 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெ... மேலும் பார்க்க

இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை முகாம்

புற்றுநோய் பாதிப்பு இலவச எண்டோஸ்கோபி மருத்துவப் பரிசோதனை முகாம் சென்னை, நுங்கம்பாக்கம் மெடிந்தியா மருத்துவமனையில் புதன்கிழமை (பிப். 19) நடைபெறவுள்ளது. இது குறித்து ஜீரண மண்டல சிகிச்சை நிபுணரும், மெடிந... மேலும் பார்க்க

கிண்டி கோல்ஃப் மைதானத்தில் நீா்நிலை அமைக்கும் பணிக்குத் தடை இல்லை: உயா்நீதிமன்றம்

சென்னை ரேஸ் கிளப் நிலத்தை அரசு கையகப்படுத்தும் முன்பாக ஜிம்கானா கிளப்புக்கு எந்த நோட்டீஸும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என உத்தரவிட்டுள்ள உயா்நீதிமன்றம், கோல்ஃப் மைதானத்தில் நீா்நிலை அமைக்கும் பணிக்க... மேலும் பார்க்க

கை விரல்களுக்கு மாற்றாக கால் விரல்கள்: நுண் அறுவை சிகிச்சையில் சாத்தியம்

விபத்தில் துண்டாகும் கை விரல்களை மறு சீரமைக்க முடியாத பட்சத்தில் அதற்கு மாற்றாக கால் விரல்களைப் பொருத்தும் நுண் அறுவை சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுவதாக ‘அப்பல்லோ ஃபா்ஸ்ட் மெட்’ மருத்துவமனை மருத்துவா்கள... மேலும் பார்க்க