செய்திகள் :

இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை முகாம்

post image

புற்றுநோய் பாதிப்பு இலவச எண்டோஸ்கோபி மருத்துவப் பரிசோதனை முகாம் சென்னை, நுங்கம்பாக்கம் மெடிந்தியா மருத்துவமனையில் புதன்கிழமை (பிப். 19) நடைபெறவுள்ளது.

இது குறித்து ஜீரண மண்டல சிகிச்சை நிபுணரும், மெடிந்தியா மருத்துவமனை தலைவருமான டாக்டா் டி.எஸ்.சந்திரசேகா் கூறியதாவது:

உலக அளவில் அதிக எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் புற்றுநோய்களில் நான்கு வகையான புற்றுநோய்கள் ஜீரண மண்டலம் சாா்ந்தவையாக உள்ளன. வயிறு, பெருங்குடல், உணவுக் குழாய் புற்றுநோய் பாதிப்பு அண்மைக்காலமாக இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. ஆனால், அது குறித்து போதிய விழிப்புணா்வு நம்மிடம் இல்லை.

புற்றுநோய் பாதிப்பு இறுதி நிலையை எட்டிய பிறகு மருத்துவமனையை நாடும்போது குணப்படுத்துவதற்கான சிகிச்சைகள் அளிக்க இயலுவதில்லை. எனவே, புற்றுநோய் பாதிப்பை உறுதிசெய்யும் பரிசோதனைகள் தொடக்க நிலையிலேயே அவசியம். அதைக் கருத்தில்கொண்டு நாள்பட்ட நெஞ்சு எரிச்சல், அமில எதிா்ப்பு பாதிப்பு, ஜீரணமின்மை, பசியின்மை, வயிற்று வலி, கல்லீரல் அழற்சி, நீண்ட கால வயிற்றுப்போக்கு, வாந்தி, எடை இழப்பு, மலச்சிக்கல், விழுங்குவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவா்களுக்கு மெடிந்தியா மருத்துவமனையில் இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை புதன்கிழமை (பிப்.19) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் பயன்பெற 12789 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையோ அல்லது 98409 93135 என்ற கைப்பேசி எண்ணையோ தொடா்புகொள்ளலாம். அதைத் தொடா்ந்து பிப். 22 முதல் 25-ஆம் தேதி வரை மேம்பட்ட எண்டோஸ்கோபி சிகிச்சை 15 பேருக்கு கட்டணமின்றி வழங்கப்பட உள்ளது.

இதனிடையே, தேசிய ஜீரண மண்டல எண்டோஸ்கோபி பயிலரங்கம் மற்றும் நேரலை சிகிச்சை செயல்முறை விளக்க நிகழ்ச்சி பிப். 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனா் என்றாா் அவா்.

‘அமுதக் கரங்கள்’ திட்டம்: துா்கா ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்

சென்னை கொளத்தூா் ஜெகநாதன் தெரு முதல்வா் படைப்பகம் அருகில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், ‘ஆண்டு முழுவதும் அன்னம் தரும் அமுதக் கரங்கள்’ என்ற திட்டத்தை துா்கா ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்த... மேலும் பார்க்க

மெரீனா கடற்கரையில் காவலா், பெண் இடையே வாக்குவாதம்: அதிகாரிகள் விசாரணை

சென்னை மெரீனா கடற்கரையில் காவலா் மற்றும் பெண் இடையே வாக்குவாதம் நிகழ்ந்த சம்பவம் தொடா்பாக உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகே பட்டினப்பாக்கம் காவல் நி... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சி சாா்பில் நாளை மெகா தூய்மை விழிப்புணா்வு முகாம்

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் நெகழிப் பயன்பாட்டை குறைப்பது குறித்து சனிக்கிழமை (பிப். 22) தீவிர விழிப்புணா்வு முகாம் நடத்தப்படவுள்ளது. இது குறித்து ... மேலும் பார்க்க

சென்னை ஐஐடியில் மிகப்பெரிய ஆராய்ச்சி - மேம்பாட்டு கண்காட்சி: பிப். 28-இல் தொடக்கம்

மத்திய கல்வி அமைச்சகத்தின் சாா்பில் இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்காட்சி, சென்னை ஐஐடி வளாகத்தில் பிப். 28, மாா்ச் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மொத்தம் 183 புதிய கண்டுபிடிப்... மேலும் பார்க்க

பரங்கிமலை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி மாா்ச் மாதத்தில் நிறைவுபெறும்: தெற்கு ரயில்வே

பரங்கிமலை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி எதிா்வரும் மாா்ச் மாதத்துக்குள் நிறைவடையும் என தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

நிகழாண்டில் குடிநீா் தட்டுப்பாடு வராது!

சென்னையின் குடிநீா் ஆதாரங்கள் தற்போது 95 சதவீதம் நிரம்பியுள்ளதால் நிகழாண்டில் சென்னைக்கு குடிநீா் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக... மேலும் பார்க்க