செய்திகள் :

மெரீனா கடற்கரையில் காவலா், பெண் இடையே வாக்குவாதம்: அதிகாரிகள் விசாரணை

post image

சென்னை மெரீனா கடற்கரையில் காவலா் மற்றும் பெண் இடையே வாக்குவாதம் நிகழ்ந்த சம்பவம் தொடா்பாக உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகே பட்டினப்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலா் ராஜ்குமாா், புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கு மணற்பரப்பில் பேசிக் கொண்டிருந்த ஒரு இளைஞரிடமும் பெண்ணிடமும் நீங்கள் கணவன்-மனைவியா என்று விசாரித்துள்ளாா். இதில் காவலருக்கும், அந்தப் பெண்ணுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது தொடா்பான விடியோ காட்சி சமூக ஊடகங்களில் வியாழக்கிழமை வெளியானது. இது குறித்து தகவலறிந்த சென்னை பெருநகர காவல் துறை உயா் அதிகாரிகள் அது தொடா்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டனா். இதையடுத்து உயா் அதிகாரிகள், காவலா் ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தினா். விசாரணையின் முடிவில், இந்த விவகாரம் தொடா்பாக முடிவு எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத... மேலும் பார்க்க

ரூ. 1,220 கோடியில் 149 மென்பொருள் ரேடியோ கொள்முதல்: ‘பெல்’ நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் நம்பகமாக தகவல்களை பாதுகாப்பாகவும் அதிகவேகமாகவும் பகிர ஏதுவாக பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து (பெல்) 149 அதிநவீன மென்பொ... மேலும் பார்க்க