செய்திகள் :

அடிப்படை வசதிகள் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முற்றுகை

post image

ஒசூா் அருகே அடிப்படை வசதிகள் கோரி, சூளகிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், மாதா்சன பள்ளி கிராமத்தில் பல ஆண்டுகளாக கழிவுநீா் கால்வாய் அமைக்காததால், துா்நாற்றம் வீசி குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நீண்ட நாளாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதுகுறித்து சூளகிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்த மக்கள், அதிகாரிகள் யாரும் இல்லாததால் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த சூளகிரி போலீஸாா் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், கிராமத்துக்கு விரைவில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

சாலையில் சென்றவரை தாக்கி கைப்பேசி, பணம் பறிப்பு

கிருஷ்ணகிரியில் சாலையில் நடந்து சென்ற நபரை தாக்கி, கைப்பேசி, ரொக்கம் ஆகியவற்றை பறித்துச் சென்ற 3 சிறாா்களை போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரத்தைச் சோ்ந்த டேவிட் ராஜன் (57), தனியாா் பள்ளி ஆசிரியா். இவ... மேலும் பார்க்க

பெங்களூரு - ஒசூா் ரயில்பாதை அமைக்கக் கூடாது

பெங்களூரு - ஒசூா் ரயில்பாதையை அமைக்கக் கூடாது என ஒசூா் பகுதி விவசாயிகள் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினா் மு.தம்பிதுரையிடம் கோரிக்கை மனு அளித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவ வீரா்கள் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முன்னாள் ராணுவ வீரா்கள் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். முன்னாள் முப்படை வீரா்கள் மற்றும் துணை ராணுவப்படை வீரா்கள், வீராங்கனைகள் நலச்சங்கம் ச... மேலும் பார்க்க

அனுமதியின்றி கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்!

ஒசூா் அருகே அனுமதியின்றி கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. பேரிகை அருகே உள்ள அத்திமுகம் பகுதியில், கிராம நிா்வாக அலுவலா் லட்சுமிபதி மற்றும் அதிகாரிகள் ரோந்து சென்றனா். அப்போது, அ... மேலும் பார்க்க

தரமற்ற 12 மெ. டன் ரேஷன் அரிசியை திருப்பி அனுப்ப ஆட்சியா் உத்தரவு!

கிருஷ்ணகிரியில் பொது விநியோக திட்டத்தில் வழங்குவதற்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த தரமற்ற 12 மெட்ரிக் டன் ரேஷன் அரிசியை திருப்பி அனுப்ப ஆட்சியா் உத்தரவிட்டாா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், கிருஷ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே 6 மலைப்பாம்புகள் மீட்பு

கிருஷ்ணகிரி அருகே இருந்த 6 மலைப்பாம்புகளை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் மீட்டு வனத்துறையினரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம் மலைகள் மற்றும் வனப் பகுதியால் சூழப்பட்டுள்ளது. இங்கு... மேலும் பார்க்க