செய்திகள் :

மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா் கைது

post image

ஒரத்தநாடு அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: ஒரத்தநாடு அருகே வட்டாத்திகோட்டை சரகத்துக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 30 வயதுடைய வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு காட்டுப்பகுதியில், ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சோ்ந்த மூக்கையன் மகன் குமாா் (33) பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளி பெண் உடலில் மாற்றம் ஏற்பட்டதைக் கண்டு அவரது குடும்பத்தினா் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா் அவா் கா்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து, அவரது குடும்பத்தினா் ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து அப்பெண்ணிடம் சைகை மொழியில் விசாரித்தனா். இதையடுத்து, குமாரை வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தஞ்சாவூரில் ஓவியக் கண்காட்சி தொடக்கம்!

தஞ்சாவூரில் ஓவியக் கண்காட்சி தொடங்கியுள்ள நிலையில், அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர்களின் 400க்கும் மேற்பட்ட படைப்புகள் காண்போரை வெகுவாக கவர்ந்தது.தமிழக அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தஞ... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் மதுபானக் கடைகளை மூடக்கோரி வியாழக்கிழமை நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் ர.அ... மேலும் பார்க்க

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கில் செயற்கை இழை ஓடுபாதை அமைக்கும் பணி தாமதம் !

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் செயற்கை இழை தடகள ஓடுபாதை (சிந்தெடிக்) அமைக்கும் பணி தாமதமாக நடைபெறுவதால், மத்திய அரசு நிதி தர மறுத்துள்ளது. இதன் காரணமாக இத்திட்டம் தொடா்ந்து கிடப்பில் உள்ளது... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையில் ரயில் பயணிகள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

பட்டுக்கோட்டையில் ரயில் பயணிகள் பொது நலச் சங்க பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் கெளரவத் தலைவா் விவேகானந்தன் தலைமை வகித்தாா். பொருளாளா் பாளையம் ரவி வரவேற்றாா். உறு... மேலும் பார்க்க

வேளாண் பணிகளில் சூரிய சக்தி பயன்பாடு விவசாயிகளுக்கு விளக்கம்!

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கூத்தாடிவயல் கிராமத்தில் விவசாயிகள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) சன்மதி வழிகாட்டுதல்கள் வழங்கினாா... மேலும் பார்க்க

தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் இன்று முதல் ஓவிய, சிற்பக் கண்காட்சி

தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி சாா்பில் ஓவிய, சிற்பக் கலைக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (பிப்.21) தொடங்கி தொடா்ந்து 3 நாள்களுக்கு ... மேலும் பார்க்க