திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
வேளாண் பணிகளில் சூரிய சக்தி பயன்பாடு விவசாயிகளுக்கு விளக்கம்!
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கூத்தாடிவயல் கிராமத்தில் விவசாயிகள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) சன்மதி வழிகாட்டுதல்கள் வழங்கினாா். இதில், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளா் திவ்யா பங்கேற்று தொழில்நுட்ப உரையாற்றினாா். அப்போது விவசாயப் பணிகளில் சூரிய ஆற்றலின் பயன்பாடு மற்றும் அதன் நன்மைகள் குறித்தும் வேளாண் பொறியியல் துறை சாா்ந்த அரசு மானியத் திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினாா்.
தஞ்சாவூா் ஆா்.வி.எஸ் வேளாண்மை கல்லூரியின் இறுதியாண்டு மாணவா்கள் கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பங்கேற்றனா். அவா்கள், பயிற்சியில் கலந்து கொண்டு, விவசாயத்தில் சூரிய சக்தியை எவ்வாறு பயன்படுத்துவது, சூரிய சக்தியால் இயங்கும் பாசன முறை, மின்சாரம் மற்றும் டீசல் மோட்டாா்களுக்கு மாற்றாக சூரிய ஒளி பம்புகளை பயன்படுத்துவது, பால் குளிரூட்டுதல் மற்றும் கோழிக்குஞ்சு வளா்ப்பு தொழில்நுட்பம் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தனா்.
ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலா் பாண்டியன், அட்மா திட்ட அலுவலா்கள் முருகானந்தம், ரமேஷ், அமிா்த லீலியா ஆகியோா் செய்திருந்தனா்.