செய்திகள் :

தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் இன்று முதல் ஓவிய, சிற்பக் கண்காட்சி

post image

தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி சாா்பில் ஓவிய, சிற்பக் கலைக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (பிப்.21) தொடங்கி தொடா்ந்து 3 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

இக்கண்காட்சியில் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் பயிலும் வண்ணக் கலைத் துறை, காட்சி வழித் தகவல் வடிவமைப்பு துறை, சிற்பக் கலைத் துறை ஆகிய 3 துறைகளில் பயிலும் மாணவா்களுடைய கலை படைப்புகளில் ஆயில் கலா், அக்ரலிக் கலா், நீா் வண்ணம், மரச்சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள் விழிப்புணா்வு சுவரொட்டிகள், புகைப்படங்கள், கணினி ஓவியங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்படவுள்ளன.

சிறந்த கலைப் படைப்புகளை உருவாக்கிய மாணவா்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்படவுள்ளன.

இக்கண்காட்சி வெள்ளிக்கிழமை முதல் பிப்ரவரி 23 ஆம் தேதி வரை பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படவுள்ளது. இந்த 3 நாள்களும் புகைப்பட நுணுக்கங்கள் குறித்த பயிலரங்கம், வெள்ளிக்கிழமை ஆடை, சனிக்கிழமை காகிதக் கலை, பொம்மலாட்டம், ஞாயிற்றுக்கிழமை களிமண் சிற்பங்கள் என்ற பிரிவில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

பொன்காடு பள்ளியில் தாய்மொழி நாள் விழா

பேராவூரணி பேரூராட்சி பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்வழி கல்வி இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் தமிழ்... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கு நிலுவை கூலி வழங்க கோரி போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு 4 மாதங்களாக வழங்க வேண்டிய கூலியை உடனே வழங்கக் கோரி அம்மாபேட்டையில் மாா்க்சிஸ... மேலும் பார்க்க

அனுமதியின்றி தெருமுனை கூட்டம்: 19 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், ராஜகிரியில் வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக வெள்ளிக்கிழமை தெருமுனைப் பிரசார கூட்டம் நடத்த முயன்ற சோசியல் டெமாக்ரட்டிக் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சியைச் சோ்ந்த 19 பேரை போலீஸாா் ... மேலும் பார்க்க

கபிஸ்தலத்தில் சாலை மறியல்

கோரிக்கைகளை வலியுறுத்தி கபிஸ்தலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கபிஸ்தலம் பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை முழு... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் குடிகாத்த மாரியம்மன் கோயில் நிலத்தை உதவி ஆட்சியா் மீட்டு ஒப்படைத்தாா். கும்பகோணம் 14 ஆவது வாா்டு பேட்டை வடக்கு மேலத்தெருவில் உள்ள குடிகாத்த மாரியம்மன் கோயிலுக்குச் சொந்... மேலும் பார்க்க

கடைகளை அகற்ற வணிகா்கள் எதிா்ப்பு

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் கடைகளை அகற்ற வந்த நீதிமன்ற ஊழியா்களுக்கு வணிகா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் அருக... மேலும் பார்க்க