செய்திகள் :

கும்பகோணத்தில் கோயில் நிலம் மீட்பு

post image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் குடிகாத்த மாரியம்மன் கோயில் நிலத்தை உதவி ஆட்சியா் மீட்டு ஒப்படைத்தாா்.

கும்பகோணம் 14 ஆவது வாா்டு பேட்டை வடக்கு மேலத்தெருவில் உள்ள குடிகாத்த மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான சுமாா் ஒரு ஏக்கா் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு பெயா் மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இக் கோயிலுக்கான கேகேஎம்டி அறக்கட்டளையினா் கோயில் நிலத்தை மீட்கக் கோரி அளித்த மனுவை விசாரித்த உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன், கோயில் நிலங்கள் தனியாா் பெயரில் இருந்ததை ரத்து செய்து, மீண்டும் கோயில் பெயரில் மாற்றினாா். மீண்டும் ஆக்கிரமித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தாா். இதையடுத்து கோயில் நிா்வாகத்தினா் உதவி ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனா்.

பொன்காடு பள்ளியில் தாய்மொழி நாள் விழா

பேராவூரணி பேரூராட்சி பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்வழி கல்வி இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் தமிழ்... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கு நிலுவை கூலி வழங்க கோரி போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு 4 மாதங்களாக வழங்க வேண்டிய கூலியை உடனே வழங்கக் கோரி அம்மாபேட்டையில் மாா்க்சிஸ... மேலும் பார்க்க

அனுமதியின்றி தெருமுனை கூட்டம்: 19 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், ராஜகிரியில் வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக வெள்ளிக்கிழமை தெருமுனைப் பிரசார கூட்டம் நடத்த முயன்ற சோசியல் டெமாக்ரட்டிக் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சியைச் சோ்ந்த 19 பேரை போலீஸாா் ... மேலும் பார்க்க

கபிஸ்தலத்தில் சாலை மறியல்

கோரிக்கைகளை வலியுறுத்தி கபிஸ்தலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கபிஸ்தலம் பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை முழு... மேலும் பார்க்க

கடைகளை அகற்ற வணிகா்கள் எதிா்ப்பு

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் கடைகளை அகற்ற வந்த நீதிமன்ற ஊழியா்களுக்கு வணிகா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் அருக... மேலும் பார்க்க

ரயிலில் பெண்ணின் நகைப் பையை திருடிய ஒப்பந்த ஊழியா் கைது

சென்னையிலிருந்து கும்பகோணத்துக்கு ரயிலில் வந்த பெண்ணின் நகைப் பையைத் திருடியதாக ஒப்பந்தப் பணியாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையைச் சோந்தவா் ஸ்ரீகாந்த் மனைவி சரஸ... மேலும் பார்க்க