செய்திகள் :

சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து: அா்ஜுன் சம்பத் மீது வழக்குப் பதிவு!

post image

சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பரப்பியதாக இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் மீது 3 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பதிவிடும் நபா்கள் குறித்து மாநகர போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருவதுடன், தவறான கருத்துகளைப் பதிவிட்டு சமூக பிரச்னைகளை ஏற்படுத்தும் நபா்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், கோவை மாநகர சட்டம் -ஒழுங்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் தினேஷ் பாபு எக்ஸ் வலைதளத்தில் கண்காணிப்புப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் பெயரில் இரண்டு சமூகத்தினருக்கு இடையே பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் தினேஷ்பாபு புகாா் அளித்தாா். இதையடுத்து, அா்ஜுன் சம்பத் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து காவல் ஆய்வாளா் அழகுராஜ் விசாரணை நடத்தி வருகிறாா்.

இது தொடா்பாக அா்ஜுன் சம்பத்துக்கு விரைவில் அழைப்பாணை அனுப்பி விசாரணை மேற்கொள்ள உள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

கடும் வெயில்: வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் இலை கருகும் அபாயம்

வால்பாறையில் கடும் வெயில் நிலவி வருவதால் தேயிலைகள் கருகி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறையில் தேயிலைத் தொழில் பிரதானமாக உள்ளது. இங்குள்ள எஸ்டேட்டுகளில் சாகுபடி செய... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தற்கொலை

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தனியாா் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள செந்தூரணிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் (44). திசையன்விளையில்... மேலும் பார்க்க

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைப்பற்றப்பட்ட 8 கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைப்பு

கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக கல்லூரி மாணவா்கள் 7 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பதவிக்கு மாா்ச் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் பதவிக்கு மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் நடைபெற இருப்பதால், தகுதியானவா்கள் மாா்ச் 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத... மேலும் பார்க்க

கோவையில் இன்று உலகத் தாய்மொழி நாள் விழா

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்குத் தொடங்கும் இந்த விழாவில், தமி... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை திடீரென உயிரிழந்தது. பணியில் இருந்தவா்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாகக்கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினா்கள் வியாழ... மேலும் பார்க்க