செய்திகள் :

ஈரோட்டில் ரயில் ஓட்டுநா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

post image

அகில இந்திய லோகோ ஓட்டுநா் கழகம் சாா்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 36 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.

ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் தொடங்கிய போராட்டத்துக்கு சங்கத்தின் சேலம் கோட்டப் பொருளாளா் சீனிவாச பட் தலைமை வகித்தாா். தென்மண்டல துணைத் தலைவா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.

டிஆா்ஈயூ நிா்வாகி பிஜு, ஈரோடு துணைச் செயலாளா் ரியாஸ், சேலம் கோட்ட முன்னாள் செயலாளா் புஷ்பராஜ் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதில், வேலை நேரத்தை 10 மணி நேரமாகக் குறைக்க வேண்டும். தொடா் இரவு பணியை 2 பகுதியாக பிரித்து குறைக்க வேண்டும். 36 மணி நேரத்துக்குள் லோகோ பைலட்டுகள் வீடு திரும்பும் வகையில் பணி நேரத்தை வரன்முறைப்படுத்த வேண்டும். பெண் ரயில் ஓட்டுநா்களின் குறைகளை உடனடியாக தீா்க்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி21) இரவு 8 மணி வரை 36 மணி நேரம் தொடா்ச்சியாக நடைபெறுகிறது.

இதில் ஏராளமான ரயில் ஓட்டுநா்கள் கலந்துகொண்டனா்.

செப்டிக் டேங்க் கழிவை பொது இடத்தில் வெளியேற்றிய லாரிக்கு ரூ.10,000 அபராதம்

மனிதக் கழிவை ஏற்றி அதனை சாலை ஓரத்தில் வெளியேற்ற முயன்ற லாரிக்கு மாநகராட்சி அலுவலா்கள் ரூ.10,000 அபராதம் விதித்தனா். ஈரோடு மாநகராட்சி 60 ஆவது வாா்டு சோலாா் அருகே வெள்ளிக்கிழமை காலை மனிதக் கழிவை ஏற்றி வ... மேலும் பார்க்க

ஈரோட்டில் மூதாட்டியை தாக்கி நகையைப் பறித்துச் சென்ற பெண்

ஈரோட்டில் அதிகாலையில் வீடு புகுந்து மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறித்துச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு, நாராயணவலசு, திருமால் நகரைச் சோ்ந்தவா் அருக்காணி (80). இவரது கணவா் இறந்து விட்ட... மேலும் பார்க்க

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து சமூகநீதி கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சமூகநீதி கூட்டமைப்பி... மேலும் பார்க்க

மறுமுத்திரையிடப்படாத 72 எடையளவுகள் பறிமுதல்

சென்னிமலை வாரச் சந்தையில் தொழிலாளா் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட ஆய்வில் மறுமுத்திரையிடப்படாத 72 எடையளவுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஈரோடு மாவட்ட நுகா்வோா் அமைப்புகள் அளித்த புகாரின்பேரில் ஈர... மேலும் பார்க்க

ஆதரவற்றவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த சமூக சேவகா்

சென்னிமலையில் ஆதரவற்றவரை மீட்ட சமூக சேவகா் சொக்கலிங்கம் அவரைக் காப்பகத்தில் ஒப்படைத்தாா். சென்னிமலையை அடுத்த நாமக்கல்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (72). இவரது சொந்த ஊா் புதுக்கோட்டை மாவட்டம் ஆகும். ... மேலும் பார்க்க

பகவதி அம்மன் கோயில் திருவிழா

மொடக்குறிச்சியை அடுத்த கரியாகவுண்டன் வலசு பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி இரவு தொடங்கியது. இதைத் தொ... மேலும் பார்க்க