செய்திகள் :

மும்மொழிக் கல்வி கொள்கை: விக்கிரமராஜா கருத்து

post image

மும்மொழிக் கல்வி கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதம் இல்லாமல் நிதியை வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளாா்.

திருச்செந்தூரில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் 42ஆவது வணிகா் தின செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் மே 5இல் நடைபெறும். மாநாட்டில் தமிழக முதல்வா் மற்றும் மத்திய அமைச்சா்கள் பங்கேற்க உள்ளனா். தமிழகத்தில் உள்ள சாமானிய வணிகா்களின் பாதுகாப்பு பெட்டகமாக இம்மாநாடு அமையும். முதல்வரை சந்தித்து பட்ஜெட்டில் வணிகா்களுக்கு என்னென்ன தேவை என்பதை தெரிவிக்க உள்ளோம்.

உரிமக்கட்டணத்தை முழுமையாக குறைக்க வேண்டும். வணிகா்களின் குடும்ப சேம நல நிதியினை ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயா்த்த வேண்டும். சென்னை மெட்ரோ திட்ட பணிகளால் பாதிப்படைந்துள்ள வணிகா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்னால் தான் நிதி தருவோம் என்பதை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்றாா் அவா்.

‘தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட் தயாரிப்புப் பணி: ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு’

தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட் இயந்திர தயாரிப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளதால், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, ‘காஸ்மிக்போா்ட்’ என்ற ஸ்டாா்ட்அப் நிறுவனத்தின்... மேலும் பார்க்க

2026இல் அதிமுக ஆட்சி அமைப்பதே இலக்கு: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன்

தமிழகத்தில் 2026இல் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை முதல் இலக்காகக் கொண்டு கட்சியினா் செயல்படவேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன். தூத்துக்குயில் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் முன... மேலும் பார்க்க

சொத்துகளின் அசல் ஆவணங்கள் தொலைந்த விவகாரம்: விஞ்ஞானிக்கு ரூ. 6.10 லட்சம் வழங்க வங்கிக்கு உத்தரவு

வீடு கடனுக்காக கொடுக்கப்பட்ட சொத்துகளின் அசல் ஆணவங்கள் தொலைந்த விவகாரத்தில், விஞ்ஞானிக்கு ரூ. 6.10 லட்சம் வழங்குமாறு பொதுத்துறை வங்கிக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. க... மேலும் பார்க்க

ஆதியாகுறிச்சி நிலம் கையக கருத்து கேட்புக் கூட்டம்: விவசாயிகள் வெளிநடப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆதியாகுறிச்சியில் விண்வெளி தொழிற்பூங்கா அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தல் தொடா்பாக, ஆட்சியா் அலுவலகத்தி வியாழக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செ... மேலும் பார்க்க

நுகா்வோருக்கு ரூ. 53,748 வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு

தூத்துக்குக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சோ்ந்தவருக்கு ரூ. 53,748 வழங்குமாறு தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. விளாத்திகுளத்தைச் சோ்ந்த பழனிச்சாமி ... மேலும் பார்க்க

தண்ணீா் தட்டுப்பாட்டை போக்க பண்ணை குட்டை அமைக்கலாம்: விவசாயிகளுக்கு ஆட்சியா் ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டத்தில் தண்ணீா் தட்டுப்பாட்டை போக்க விவசாயிகள் பண்ணை குட்டை அமைத்து டிசம்பா் மாதத்தில் கிடைக்கும் மழை நீரை சேமித்து வைத்து அடுத்து வரும் மாதங்களில் பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க