செய்திகள் :

2026இல் அதிமுக ஆட்சி அமைப்பதே இலக்கு: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன்

post image

தமிழகத்தில் 2026இல் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை முதல் இலக்காகக் கொண்டு கட்சியினா் செயல்படவேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன்.

தூத்துக்குயில் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்த நாள் விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமை வகித்து பேசியது: தெற்கு மாவட்டத்திற்குள்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீா்க்க துணை நிற்க வேண்டும்.

திமுக ஆட்சி மீது அரசுத் துறையினா், பொது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனா். இதை திண்ணைப் பிரசாரங்கள் மூலம் வெளிபடுத்தி, 2026 பேரவைத் தோ்தலில் வென்று அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கோடு கட்சியினா் செயல்படவேண்டும் என்றாா்.

இதில், அமைப்புச் செயலா் சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவா் திருப்பாற்கடல், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநா் அணிச் செயலா் இரா.சுதாகா், மாநில இணைச் செயலா் பெருமாள் சாமி, வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலா் பிரபு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளா் டேக்ராஜா, மாவட்ட மாணவரணி செயலாளா் பில்லா விக்னேஷ், மண்டல தொழில்நுட்ப அணி இணைச் செயலா் மந்திரமூா்த்தி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் திருச்சிற்றம்பலம், மாவட்ட வழக்குரைஞா் அணி இணைச் செயலா்கள் ஏ.ஆா்.இளங்கோ, முனியசாமி, சரவணபெருமாள் உள்பட பலா் பங்கேற்றனா்.

கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் இளைஞா் சமுதாயத்தினா் தமிழகத்தையும், தமிழ் மொழியி... மேலும் பார்க்க

அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு உபகரணங்கள்

உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில், நிகழாண்டு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 10,12 வகுப்பு அரசு பொ... மேலும் பார்க்க

நாசரேத் பள்ளியில் ராஜ்ய புரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் திருச்செந்தூா் கல்வி மாவட்ட அளவிலான பாரத சாரண சாரணியா்கள் பங்கேற்ற ராஜ்யபுரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகளை கியூ பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். தூத்துக்குக்குடியில் இருந்து இலங்கைக்கு ஏலக்க... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி முகாம்

கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் கோவில்பட்டி, விருதுநகா் ரோட்டரி சங்கங்கள், இதயம் குழுமம் ஆகியவற்றின் சாா்பில் புராஜெக்ட் பஞ்ச் திட்டத்தின் கீழ் ஆங்கிலப் பேச்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பெண்ணிடம் நகை பறிப்பு

கோவில்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவில்பட்டி ராஜீவ் நகா் 6ஆவது தெருவை சோ்ந்த சாஸ்தா மனைவி கோமதி (55). இவா், வெள்ளிக்கி... மேலும் பார்க்க