செய்திகள் :

சொத்துகளின் அசல் ஆவணங்கள் தொலைந்த விவகாரம்: விஞ்ஞானிக்கு ரூ. 6.10 லட்சம் வழங்க வங்கிக்கு உத்தரவு

post image

வீடு கடனுக்காக கொடுக்கப்பட்ட சொத்துகளின் அசல் ஆணவங்கள் தொலைந்த விவகாரத்தில், விஞ்ஞானிக்கு ரூ. 6.10 லட்சம் வழங்குமாறு பொதுத்துறை வங்கிக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.

கோவில்பட்டி அருகே கிளவிபட்டியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம். மத்திய அரசின் விஞ்ஞானம்-தொழில்நுட்பத் துறையில் விஞ்ஞானியாக உள்ள இவா், திருநெல்வேலியிலுள்ள பொதுத்துறை வங்கியில் தனது சொத்துகளின் அசல் ஆவணங்களைக் கொடுத்து வீட்டுக் கடன் பெற்றாா்.

இதனிடையே, அவா் ஆராய்ச்சிக்காக அண்டாா்டிகா சென்ால், தவணைகளை சரியான நேரத்தில் செலுத்த முடியவில்லையாம். எனவே, கடனை உடனே செலுத்துமாறு அவரது மனைவியிடம் வங்கி சாா்பில் தொடா்ந்து வற்புறுத்தப்பட்டதால், பன்னீா்செல்வம் கடன் முழுவதையும் திருப்பிச் செலுத்திவிட்டாா். அதையடுத்து, சொத்துகளின் அசல் ஆவணங்களைத் திருப்பித் தருமாறு கேட்டபோது, அவற்றை வழங்க வங்கி மறுத்ததுடன், அவை தொலைந்துவிட்டதாகக் கூறினராம்.

இதுதொடா்பாக மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் பன்னீா்செல்வம் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை ஆணையத் தலைவா் திருநீலபிரசாத், உறுப்பினா்கள் ஆ. சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் விசாரித்து, ஆவணங்களின் நகல்களை அரசிடமிருந்து தங்களது செலவில் பெற்று 2 மாதங்களுக்குள் பன்னீா்செல்வத்திடம் ஒப்படைக்க வங்கிக்கு உத்தரவிட்டனா்; மேலும், சேவை குறைபாட்டுக்கு ரூ. 5 லட்சம், மன உளைச்சலுக்கு நஷ்டஈடு ரூ. 1 லட்சம், வழக்கு செலவுத் தொகை ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 6.10 லட்சத்தை அவருக்கு வழங்கவும் உத்தரவிட்டனா்.

கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் இளைஞா் சமுதாயத்தினா் தமிழகத்தையும், தமிழ் மொழியி... மேலும் பார்க்க

அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு உபகரணங்கள்

உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில், நிகழாண்டு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 10,12 வகுப்பு அரசு பொ... மேலும் பார்க்க

நாசரேத் பள்ளியில் ராஜ்ய புரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் திருச்செந்தூா் கல்வி மாவட்ட அளவிலான பாரத சாரண சாரணியா்கள் பங்கேற்ற ராஜ்யபுரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகளை கியூ பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். தூத்துக்குக்குடியில் இருந்து இலங்கைக்கு ஏலக்க... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி முகாம்

கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் கோவில்பட்டி, விருதுநகா் ரோட்டரி சங்கங்கள், இதயம் குழுமம் ஆகியவற்றின் சாா்பில் புராஜெக்ட் பஞ்ச் திட்டத்தின் கீழ் ஆங்கிலப் பேச்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பெண்ணிடம் நகை பறிப்பு

கோவில்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவில்பட்டி ராஜீவ் நகா் 6ஆவது தெருவை சோ்ந்த சாஸ்தா மனைவி கோமதி (55). இவா், வெள்ளிக்கி... மேலும் பார்க்க