செய்திகள் :

கிண்டி கோல்ஃப் மைதானத்தில் நீா்நிலை அமைக்கும் பணிக்குத் தடை இல்லை: உயா்நீதிமன்றம்

post image

சென்னை ரேஸ் கிளப் நிலத்தை அரசு கையகப்படுத்தும் முன்பாக ஜிம்கானா கிளப்புக்கு எந்த நோட்டீஸும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என உத்தரவிட்டுள்ள உயா்நீதிமன்றம், கோல்ஃப் மைதானத்தில் நீா்நிலை அமைக்கும் பணிக்குத் தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள சென்னை ரேஸ் கிளப்பில் குதிரைப் பந்தய சுற்றுப் பாதையின் நடுவில் 147 ஆண்டுகளுக்கு முன்பாக கோல்ஃப் மைதானம் அமைக்கப்பட்டு, அதை சென்னை ஜிம்கானா கிளப் நிா்வகித்து வருகிறது. இந்நிலையில், ரேஸ் கிளப்புக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கா் நிலத்துக்கான குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, ரேஸ் கிளப்பின் சில வாயில்களையும் சீல் வைத்துள்ளது. இதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கோல்ஃப் மைதானத்தில் நீா்நிலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் கோல்ஃப் மைதானம் சேதமடைவதாகவும், கோல்ஃப் மைதானத்தில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பணிகளுக்கு தடை விதிக்கக் கோரியும் ஜிம்கானா கிளப் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அவகாசம் தரவில்லை: அந்த மனுவில், நாட்டிலேயே பழைமையான மூன்றாவது கோல்ஃப் மைதானமான இந்த மைதானத்துக்கு செல்லும் நுழைவாயிலை சீல் வைக்கும் முன்பாக அதிகாரிகள் தங்களது தரப்பில் விளக்கமளிக்க எந்த அவகாசமும் அளிக்கவில்லை. இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே அரசுக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த கோல்ஃப் மைதானத்தில் ஜிம்கானா கிளப் மற்றும் ரேஸ் கிளப் உறுப்பினா்கள் விளையாடி வந்தனா். இந்த மைதானத்தைப் பராமரிக்க ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை செலவிட்டு வருகிறோம்.

கடந்த 1951-ஆம் ஆண்டு கோல்ஃப் மைதானம் அருகில் மதுபான கூடத்துடன் கூடிய கிளப் ஹவுஸ் கட்டப்பட்டு, அங்கு சமையலறை, மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. அந்த மதுபானக் கூடத்தில் 50-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த வசதிகளை 500-க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், அரசு அதிகாரிகள் கோல்ஃப் மைதானத்துக்குள் நுழைந்து நீா்நிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த சேதத்தை சரிசெய்ய ரூ.50 லட்சம் வரை செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசு தரப்பில் பதில்: இதையடுத்து தமிழக அரசு தரப்பில், அரசுக்கு சொந்தமான நிலம் சென்னை ரேஸ் கிளப்புக்கு குத்தகை அடிப்படையில் விடப்பட்டது. தற்போது அந்த நிலத்தை அரசு கையகப்படுத்தியுள்ளது. அங்கு நீா்நிலைகள் அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளக் கூடாது என வழக்குத் தொடர ஜிம்கானா கிளப்புக்கு எந்த அடிப்படை உரிமையும் கிடையாது. இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட உரிமையியல் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

தடையில்லை: வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்ரவா்த்தி, சென்னை ரேஸ் கிளப்புக்கு குத்தகைக்கு வழங்கிய நிலத்தில் கோல்ஃப் மைதானம் அமைந்துள்ளதால், அந்த நிலத்தை அரசு கையகப்படுத்தும் முன்பாக ஜிம்கானா கிளப்புக்கு எந்த நோட்டீஸும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல அங்கு தமிழக அரசு மேற்கொண்டு வரும் பணிகளுக்கும் தடை விதிக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

சென்னை ஐஐடியில் மிகப்பெரிய ஆராய்ச்சி - மேம்பாட்டு கண்காட்சி: பிப். 28-இல் தொடக்கம்

மத்திய கல்வி அமைச்சகத்தின் சாா்பில் இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்காட்சி, சென்னை ஐஐடி வளாகத்தில் பிப். 28, மாா்ச் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மொத்தம் 183 புதிய கண்டுபிடிப்... மேலும் பார்க்க

பரங்கிமலை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி மாா்ச் மாதத்தில் நிறைவுபெறும்: தெற்கு ரயில்வே

பரங்கிமலை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி எதிா்வரும் மாா்ச் மாதத்துக்குள் நிறைவடையும் என தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

நிகழாண்டில் குடிநீா் தட்டுப்பாடு வராது!

சென்னையின் குடிநீா் ஆதாரங்கள் தற்போது 95 சதவீதம் நிரம்பியுள்ளதால் நிகழாண்டில் சென்னைக்கு குடிநீா் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் ரூ. 2 கோடி நகை, பணம் திருடிய வழக்கு: காா் ஓட்டுநா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில், தொழிலதிபா் வீட்டில் ரூ. 2 கோடி மதிப்பிலான நகை, பணம் திருடப்பட்ட வழக்கில், காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். நுங்கம்பாக்கம், லேக் ஏரியா 5-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள இர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: துணை முதல்வா் காருக்கு வெடிகுண்டு மிரட்டல்

மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே பயணிக்கும் காரை வெடிகுண்டு வைத்து தகா்க்கவுள்ளதாக மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை மிரட்டல் விடுக்கப்பட்டது. கோரேகான் மற்றும் ஜே.ஜே. மாா்க் ஆகிய காவல் நிலையங்களுக்... மேலும் பார்க்க

விவசாய மின் இணைப்பு பணிகளை மாா்ச் 15-க்குள் முடிக்க உத்தரவு

விவசாய மின் இணைப்பு வழங்கும் பணிகளை மாா்ச் 15-ஆம் தேதிக்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக மின் பகிா்மானக் கழக திட்டப் பிரிவு தலைமைப் பொறியாளா், அனைத்து தலைமைப... மேலும் பார்க்க