செய்திகள் :

பத்ம விருதாளா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பாராட்டு

post image

தமிழகத்திலிருந்து மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளவா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

பத்ம விருதுகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளவா்களின் பட்டியலை கடந்த ஜன. 25-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இதில் பத்ம விருதுகள் பெறவுள்ள தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு பாராட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட ஆளுநா் ஆா்.என்.ரவி, தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டி, நடிகையும் பரதநாட்டியக் கலைஞருமான ஷோபனா சந்திரகுமாா், மிருதங்க வித்வான் குருவாயூா் துரை, சிற்பக் கலைஞா் ராதாகிருஷ்ண தேவ சேனாபதி, தெருக்கூத்துக் கலைஞா் புரிசை கண்ணப்ப சம்பந்தன், பறை இசைக் கலைஞா் வேலு ஆசான், இதழியலாளா் லட்சுமிபதி ராமசுப்பையா், சமையல் கலைஞா் கே.தாமோதரன் (தாமு), இயற்பியல் அறிவியலாளா் எம்.டி.ஸ்ரீனிவாஸ் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தாா். மேலும், இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரா் அஸ்வினுக்குப் பதிலாக அவரது பெற்றோா்கள் நினைவுப் பரிசைப் பெற்றுக்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது:

கலை, தொழில், இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளில் சமூகத்துக்காக தொண்டாற்றி வரும் அறியப்படாத மனிதா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. எவ்வித பரிந்துரையும் இன்றி சுதந்திரமான முறையில் இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

பிப். 25-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் பிப். 25 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பிப். 25 ஆம் தேதி பகல் 12 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

சென்னை புளியந்தோப்பு மக்களுக்கு பிரியாணி பரிமாறிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சென்னை புளியந்தோப்பில் குடியிருப்பு ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின், மக்களுக்கு பிரியாணியும் பரிமாறினார். சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், நகர்... மேலும் பார்க்க

தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றம்: மு.க. ஸ்டாலின்

தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 100-க்கு 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 712 குடியிருப... மேலும் பார்க்க

தமிழகத்தில் மலையேற்றத்துக்கு ஏப். 15 வரை தடை!

தமிழகத்தில் மலையேற்றத்துக்கு வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி வரை தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.நீலகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கி 14 மாவட்டங்களில் 40 ... மேலும் பார்க்க

அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும்: அண்ணாமலை

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவருவதால், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது குறித்து ... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு: 3 பேருக்கு சம்மன்; மார்ச் 11-ல் ஆஜராக உத்தரவு

வேங்கைவயல் நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில், 3 பேருக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள காவலர் முரளி ராஜா, முத்துகிரு... மேலும் பார்க்க