Champions Trophy: 29 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானில் ICC தொடர்; களமிறங்கும் டாப் 8 அணிகள்- முழு விவரம்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று (பிப்ரவரி 19) தொடங்குகிறது.
1996 க்குப் பிறகு 29 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் பாகிஸ்தானில் ஐசிசி தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்கிறது. பாகிஸ்தானின் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி உள்ளிட்ட மைதானங்களில் போட்டிகள் நடக்கிறது.

இரு நாடுகளுக்கிடையேயான உறவை காரணம் காட்டி பிசிசிஐ இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்தது. அங்கு செல்ல மறுத்ததால், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் வகையில் ஐ.சி.சி ஏற்பாடு செய்திருக்கிறது. இன்று மதியம் 2.30 மணிக்கு கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி நாளை தனது முதல் போட்டியில் வங்கதேசத்துடன் மோதுகிறது. தொடர்ந்து அனைவரும் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கடைசி லீக் போட்டியில் மார்ச் 2ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
சாம்பியன் டிராபி தொடரில் பங்கேற்க கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் மும்பையில் இருந்து துபாய் சென்றுள்ளனர். கடைசியாக 2017ல் நடந்த சாம்பியன் டிராபியின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பார்க்கலாம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs