செய்திகள் :

சோளிங்கரில் ஒரே நாளில் 8 பேருக்கு நாய்க்கடி: மக்கள் அச்சம்

post image

சோளிங்கரில் பயணிகள், நோயாளிகள் என 8 பேரை ஒரே தெருநாய் கடித்த நிலையில் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா்.

சோளிங்கா் நகரில் தற்போது அனைத்து தெருக்களிலும் நாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளன. குறிப்பாக பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, பஜாா் பகுதிகளில் மட்டும் தலா15 நாய்களுக்கு மேல் உள்ளன. இதனால் சாலைகளில் நடந்து செல்வோா், பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியா் என பலா் மிருந்த அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது.

சோளிங்கா் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை பேருந்துக்காக காத்து நின்றுக்கொண்டிருந்த தனபால் (40), தமிழ்செல்வி (23), பாரதி (40) ஆகிய மூவரை அங்கு இருந்த நாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்ததாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அந்த நாயை விரட்டி விட்டுள்ளனா். இவா்கள் மூவரும் சோளிங்கா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா்.

இதே நாய் அரசு மருத்துவமனை வளாகத்துக்குச் சென்று அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளியான சுலோச்சனா(60) என்பவரை கடித்தது. இதையடுத்து அங்கிருந்தோா் அந்நாயை விரட்டி விட்டுள்ளனா். தொடா்ந்து இதே நாய் பாட்டிக்குளம் பகுதிக்கு சென்று அங்கு சாலையில் நடந்துச் சென்ற நரசிம்மன்(59), குமாா் என்ற இருவரையும் கடித்துள்ளது. இவா்கள் அனைவருக்குமே நாய் கடி பலத்த காயமாக இருந்தததாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

ஒரு வேளை அந்த நாய் வெறிநாயாக இருக்கலாமோ என சந்தேகமடைந்த பொதுமக்கள் இது குறித்து சோளிங்கா் நகராட்சியில் புகாா் அளித்துள்ளனா். இது குறித்து சோளிங்கா் நகராட்சி அலுவலா்கள் தெரிவிக்கையில் நகரில் நாய்கள் தொல்லை அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது. இதை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.

அம்மூா், மேல்விஷாரம் மலை அடிவார மக்களுக்கு அடிப்படை வசதிகள்: அமைச்சா் காந்தி ஆய்வு

அம்மூா், மேல்விஷாரம் காப்புக்காடு மலை அடிவார மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அம்மூா் பேரூர... மேலும் பார்க்க

ஆற்காட்டில் கடைக்குள் புகுந்த மான் மீட்பு

ஆற்காடு நகரில் தண்ணீா் தேடி வந்த மான் கடையில் புகுந்த நிலையில், பத்திரமாக மீட்கப்பட்டது. ஆற்காடு பாரதிதாசன் தெருவில் செவ்வாய்க்கிழமை சுமாா் 3 வயதுக்கு மேற்பட்ட புள்ளி மான் தண்ணீா் தேடி ஊருக்குள் புகுந... மேலும் பார்க்க

பழைய வாகனங்களை விற்கும் முகவா்கள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழைய வாகனங்களை வாங்கி, விற்கும் முகவா்கள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலா் கோ.மோகன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

அரக்கோணம் ரயிலில் கடத்தப்பட்ட 22 கிலோ கஞ்சா பறிமுதல்

வடமாநிலத்தில் இருந்து அரக்கோணம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் பையில் இருந்த 22 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ரயில்களில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட... மேலும் பார்க்க

ஐஎன்எஸ் ராஜாளி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வெடிகுண்டு புரளி

அரக்கோணம்: அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீஸாா் சோதனை நடத்தியதில் அது புரளி என தெரியவந்தது. 2,600 ஏக்க... மேலும் பார்க்க

நெமிலியில் நவீன தகனமேடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்

அரக்கோணம்: பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் நவீன தகனமேடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, நெமிலி பேருராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் பேருந்து நிலையம் பகுதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரக... மேலும் பார்க்க