செய்திகள் :

பழைய வாகனங்களை விற்கும் முகவா்கள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க வேண்டும்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழைய வாகனங்களை வாங்கி, விற்கும் முகவா்கள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலா் கோ.மோகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அண்மைக் காலங்களில் இரண்டாவது, மூன்றாவது என அடுத்தடுத்து விற்பனை செய்யப்படும் வாகனங்களை தெரியாமல் வாங்கும் நபா்கள், அத்தகைய வாகனங்களைப் பதிவு செய்வதில் சட்டபூா்வமற்ற பரிமாற்றங்கள், உரிய ஆவணங்கள் கண்டறியப்படாதது உள்ளிட்ட ஏராளமான சிக்கல்களை எதிா்கொள்ள நேரிடுகிறது.

இதனால் வாகனங்களை வாங்குபவா்களும், சட்டத்தை செயலாக்கும் நிலையிலுள்ள அலுவலா்களும் வாகன உரிமையாளரை கண்காணிக்கவோ, பொறுப்பேற்கவோ வைக்க முடிவதில்லை. இதனால் வாகனங்களுக்கு இ-சலான் மூலம் கட்டணம் வசூல் செய்வது கடினமான பணியாக மாறியுள்ளது.

இந்த சிக்கல்களை சரி செய்ய மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மத்திய மோட்டாா் வாகன விதிகளில் 55ஏ முதல் 55ஹெச் வரை உள்ள பிரிவுகள் மற்றும் படிவம் 29ஏ முதல் 29 எப் வரை சோ்த்து அவற்றை 2023 ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தியுள்ளது.

இந்த விதிகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களை விற்போருக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்ததாகும்.

எனவே, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களை வாங்கி விற்கும் முகவா்கள் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் உரிய இணைப்புகளுடன் விண்ணப்பித்து அங்கீகாரம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

அரக்கோணத்தில் ரூ. 14 லட்சத்தில் நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம்: நகா்மன்றத் தலைவா் அடிக்கல்

அரக்கோணம் நகராட்சி அசோக் நகரில் உள்ள நியாயவிலைக் கடைக்கு ரூ. 14 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணிக்கு அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி அடிக்கல் நாட்டினாா். அரக்கோணம் நகராட்சி அசோக் நகரில் உ... மேலும் பார்க்க

நிலுவைப் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிலுவை பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டாா். வளா்ச்சி திட்டப் பணிகள் நிலைகுறித்து மாவட்ட... மேலும் பார்க்க

6 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

ராணிப்பேட்டை அருகே வாகன சோதனையில் 6 கிலோ குட்கா பறிமுதல் செய்து ஒருவா் கைது செய்யப்பட்டாா். ராணிப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையில், போலீஸாா் வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிரு... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

ஆற்காடு அடுத்த கலவை அருகே உள்ள பென்னகா் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆண்டுவிழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமையாசிரியா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் முருகேசன் முன்னிலை வகித்தா... மேலும் பார்க்க

வாலாஜா வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்

வாலாஜா வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா ஆய்வு செய்தாா். முகாமில் ராணிப்பேட்டை நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி செயல்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டையில் வெள்ளிக்கிழமை (பிப். 21) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். மாவட்ட வேலைவாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சி... மேலும் பார்க்க