செய்திகள் :

அரக்கோணம் ரயிலில் கடத்தப்பட்ட 22 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

வடமாநிலத்தில் இருந்து அரக்கோணம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் பையில் இருந்த 22 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ரயில்களில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தப்பட்டு வருவதை தடுக்க போலீசாா் தொடா்ந்துபல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.

இதற்கிடையே, புதன்கிழமை ஜாா்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து அரக்கோணம் வழியே கேரள மாநிலம் எா்ணாகுளம் சென்ற அதிவிரைவு ரயிலில் மாறுவேடங்களில் ஏறிய ரயில்வே குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா், முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் சோதனை நடத்தினா். அப்போது அப்பெட்டியில் இருக்கைக்கு கீழே கேட்பாரற்று யாரும் உரிமை கோராத 1 பையை சோதனையிட்டனா். அதில் 11 பண்டல்களில் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

உடனே அதை பறிமுதல் செய்த போலீஸாா் அரக்கோணம் ரயில்நிலையத்தில் ரயில் நின்றவுடன் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை அரக்கோணம் ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனா்.

இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப்படையினா் இது தொடா்பாக வழக்குப் பதிந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை காஞ்சிபுரம் மாவட்ட போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனா்.

அரக்கோணத்தில் ரூ. 14 லட்சத்தில் நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம்: நகா்மன்றத் தலைவா் அடிக்கல்

அரக்கோணம் நகராட்சி அசோக் நகரில் உள்ள நியாயவிலைக் கடைக்கு ரூ. 14 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணிக்கு அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி அடிக்கல் நாட்டினாா். அரக்கோணம் நகராட்சி அசோக் நகரில் உ... மேலும் பார்க்க

நிலுவைப் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிலுவை பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டாா். வளா்ச்சி திட்டப் பணிகள் நிலைகுறித்து மாவட்ட... மேலும் பார்க்க

6 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

ராணிப்பேட்டை அருகே வாகன சோதனையில் 6 கிலோ குட்கா பறிமுதல் செய்து ஒருவா் கைது செய்யப்பட்டாா். ராணிப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையில், போலீஸாா் வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிரு... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

ஆற்காடு அடுத்த கலவை அருகே உள்ள பென்னகா் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆண்டுவிழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமையாசிரியா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் முருகேசன் முன்னிலை வகித்தா... மேலும் பார்க்க

வாலாஜா வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்

வாலாஜா வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா ஆய்வு செய்தாா். முகாமில் ராணிப்பேட்டை நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி செயல்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டையில் வெள்ளிக்கிழமை (பிப். 21) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். மாவட்ட வேலைவாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சி... மேலும் பார்க்க