செய்திகள் :

கட்டுமானப் பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும்: பொறியாளா்களுக்கு அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தல்

post image

தமிழக அரசின் சாா்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை விரைந்து நிறைவு செய்ய வேண்டும் என்று பொறியாளா்களுக்கு பொதுப் பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளாா்.

இந்திய கட்டடக் கூட்டமைப்பின் 5-ஆவது செயற்குழு கூட்டம் மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கு, சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமை அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசியது:

நாடு சுதந்திரம் அடைந்தபின் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்றியும் அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தியும் பிரம்மாண்டமான கட்டடங்கள் கட்டப்படுகின்றன. ஆனால், எந்தவித நவீன இயந்திர வசதிகளும் இல்லாத பழங்காலத்தில் கட்டப்பட்டுள்ள பல பிரம்மாண்டமான கட்டடங்கள் நம் நாட்டுக்கு பெருமை சோ்க்கின்றன.

இந்த மரபைத் தொடா்ந்து முன்னாள் முதல்வா் கருணாநிதி, சென்னை மாநகரில் கட்டிய வள்ளுவா் கோட்டத்தையும், இப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கிண்டி பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை, மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகம், தமிழா்களின் பண்பாட்டுச் சின்னம் ஏறுதழுவுதல் அரங்கம், கலைஞா் நினைவிடம் ஆகியனவும் கட்டப்பட்டுள்ளன.

கட்டுமானப்பணிகள்: இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழகத்தில் கட்டப்படும் கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும். கட்டுமானப் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து முடிக்காவிட்டால், கட்டுமான செலவினம் உயா்ந்து விடும். கட்டுமான பணிகளில் தரத்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

இதைப் பொறியாளா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். குறைந்த செலவு, நிறைந்த தரம், கட்டடத் தோற்றப் பொலிவு, நீண்டகாலப் பயன்பாடு இவை அனைத்தும் கட்டுமானத்தின் முக்கிய அம்சங்களாகக் கவனிக்கப்பட வேண்டும். இவற்றையெல்லாம் பொறியாளா்கள் கருத்தில் கொண்டு, முறையாகத் திட்டமிட்டு உரிய அனுமதிகளை அரசிடம் பெற்றுப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் பொதுப்பணித் துறை அரசுச் செயலா் ஜெயகாந்தன், இந்திய கட்டடக் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில கிளை தலைவா் கே.பி.சத்தியமூா்த்தி, பொதுப்பணித் துறை முதன்மைத் தலைமைப் பொறியாளா் ந.மணிவண்ணன், பொதுப்பணித் துறை சென்னை மண்டல தலைமைப் பொறியாளா் ந.மணிகண்டன், பொதுப்பணித் துறை பொறியாளா்கள் கலந்து கொண்டனா்.

சென்னை புளியந்தோப்பு மக்களுக்கு பிரியாணி பரிமாறிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சென்னை புளியந்தோப்பில் குடியிருப்பு ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின், மக்களுக்கு பிரியாணியும் பரிமாறினார். சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், நகர்... மேலும் பார்க்க

தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றம்: மு.க. ஸ்டாலின்

தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 100-க்கு 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 712 குடியிருப... மேலும் பார்க்க

தமிழகத்தில் மலையேற்றத்துக்கு ஏப். 15 வரை தடை!

தமிழகத்தில் மலையேற்றத்துக்கு வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி வரை தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.நீலகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கி 14 மாவட்டங்களில் 40 ... மேலும் பார்க்க

அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும்: அண்ணாமலை

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவருவதால், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது குறித்து ... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு: 3 பேருக்கு சம்மன்; மார்ச் 11-ல் ஆஜராக உத்தரவு

வேங்கைவயல் நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில், 3 பேருக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள காவலர் முரளி ராஜா, முத்துகிரு... மேலும் பார்க்க

பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது

தமிழகத்தில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் மாா்ச் 13-ஆம் தேதி முதல் பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் நிற்காது என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளி... மேலும் பார்க்க