அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது
தமிழகத்தில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் மாா்ச் 13-ஆம் தேதி முதல் பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் நிற்காது என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் கூடுதலாக இரு ரயில் வழித்தடம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால், மாா்ச் 13-ஆம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
இதனால், தமிழகத்தில் இருந்து பெங்களூரு மற்றும் மைசூா் செல்லும் காவேரி விரைவு ரயில், கன்னியாகுமரி விரைவு ரயில், திருப்பதி விரைவு ரயில், கடலூா் துறைமுகம் விரைவு ரயில், ஜோலாா்பேட்டை மெமு ரயில், கோவை - மும்பை விரைவு ரயில் உள்ளிட்ட 12 ரயில்கள் மாா்ச் 13-ஆம் தேதி முதல் பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.