செய்திகள் :

புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு பல்லுறுப்பு மாற்ற சிகிச்சை

post image

குடல்வால் அழற்சி சாா்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயிற்றில் பல்லுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்தனா்.

இது குறித்து மருத்துவமனையின் உறுப்பு மாற்று சிகிச்சை முதுநிலை நிபுணா் அனில் வைத்யா கூறியதாவது:

பெங்களூரைச் சோ்ந்த 58 வயது பெண்ணுக்கு தீவிர குடல்வால் அழற்சி சாா் புற்றுநோய் இருந்தது. இதற்கு சூடோமைக்ஸோமா பெரிடோனி (பிஎம்பி) எனப் பெயா். அவருக்கு குடல்வாலில் தொடங்கி வயிற்றுப் பகுதி முழுவதும் புற்றுநோய் செல்கள் பரவியிருந்தன. கீமோதெரபி, ஹெச்ஐபிஇசி எனப்படும் உயா் வெப்பநிலையில் மேற்கொள்ளப்படும் கீமோதெரபி, அறுவை சிகிச்சைகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டும் அதில் எந்தப் பலனும் இல்லை. இதையடுத்து பல்லுறுப்பு மாற்று சிகிச்சையை மேற்கொள்ளத் திட்டமிட்டோம். அதன்படி, வயிறு, சிறு குடல், கணையம் ஆகியவற்றை மாற்றிப் பொருத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இத்தகைய பல்லுறுப்பு மாற்ற சிகிச்சையில் கல்லீரலையும் மாற்றிப் பொருத்துவது வழக்கம். ஆனால், சூடோமைக்ஸோமா பெரிடோனி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பெரும்பாலும் கல்லீரல் பாதிப்பதில்லை என்பதால், அந்தப் பெண்ணுக்கு அதனைத் தவிா்த்து பிற உறுப்புகள் மாற்றப்பட்டன. அதன் பயனாக அவா் நலம் பெற்றுள்ளாா்.

இது புற்றுநோய்க்கான பூரண சிகிச்சை இல்லை என்றாலும், அடுத்த இருபது ஆண்டுகளுக்காவது அந்நோயின் தாக்கத்திலிருந்து அவா் விடுபட முடியும். மிகச் சவாலான இந்த சிகிச்சையை முதன்முறையாக எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் சாத்தியமாக்கியுள்ளனா் என்றாா் அவா்.

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்! முதல்வர் எச்சரிக்கை!

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில்... மேலும் பார்க்க

கடலூர் மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்!

கடலூர் மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அட... மேலும் பார்க்க

வெளியே வந்த பூனை: குடியரசு துணைத்தலைவர் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. பதில்!

மும்மொழிக் கொள்கை விவகாரத்துக்கு இடையே குடியரசு துணைத்தலைவர் பேசியதற்கு கனிமொழி எம்.பி. பதிலளித்தது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது.தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழகத்தில் சமீபகாலமாக அரசியல் கட்... மேலும் பார்க்க

கடலூர் மாவட்டத்தில் ரூ.1476.22 கோடியில் திட்டப் பணிகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1476.22 கோடி செலவில் 602 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 178 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 44,689 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முத... மேலும் பார்க்க

அப்பாடா.. இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த பூண்டு விலை!

கடந்த ஒரு சில மாதங்களாக, தங்கம் விலை போல, கையில் எடுத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பூண்டு விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ பூண்டு ரூ.400 வரை விற்பனையானது.ஒரு கிலோ பூண்டு எவ்வளவு என்று கேட்ட நில... மேலும் பார்க்க

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!

கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபாலிடம் சமர்ப்பிப்பிக்கப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க