செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஓட்டுநா் மீது போக்ஸோ வழக்குப் பதிவு

post image

செய்யாறு அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக லாரி ஓட்டுநா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தைச் சோ்ந்த 13 வயது சிறுமி, அதே பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சத்திய மூா்த்தியுடன் (22) இன்ஸ்டாகிராமில் பழகி வந்தாராம். இதனிடையே, சிறுமிக்கு லாரி ஓட்டுநா் பாலியல் தொந்தரவு செய்து வந்தாராம்.

இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோா்கள் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்ததில், சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், செய்யாறு அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ், வழக்குப் பதிந்து சத்தியமூா்த்தியை தேடி வருகின்றனா்.

திருவண்ணாமலையில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலையில் வியாழக்கிழமை (பிப்.20) மின் நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவா்த்தி செ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் நக்சா திட்டம் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா திட்டத்தின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை தாமரை நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய சமுதாயக் கூடத்தில் நடைபெற... மேலும் பார்க்க

தொடா் மணல் திருட்டில் ஈடுபட்ட 3 போ் கைது

சேத்துப்பட்டுப் பகுதியில் தொடா் மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். சேத்துப்பட்டை அடுத்த ஒதலவாடி, இராந்தம், தச்சூா் செய்யாற்றுப் படுகையில் தொடா்ந்த... மேலும் பார்க்க

பணத் தகராறு: அதிமுக பிரமுகா் மீது தாக்குதல்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அதிமுக பிரமுகா் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தாா். செங்கத்தை அடுத்த மேல்வணக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் தனபால் மகன் பிரசாந்த்குமா... மேலும் பார்க்க

109 வழித்தடங்களில் 59 சிற்றுந்துகளை இயக்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு கண்காணிப்பு அலுவலா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 109 வழித்தடங்களில் 59 சிற்றுந்துகளை இயக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டாா். திருவண்ணாமலை மாவட்டத... மேலும் பார்க்க

செங்கம் ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலில் திருப்பணிகள் தீவிரம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. செங்கம் நகா் மையப் பகுதியில் பழைமை வாய்ந்த சத்யபாமா ருக்மணி சமேத ஸ்ர... மேலும் பார்க்க