செய்திகள் :

பணத் தகராறு: அதிமுக பிரமுகா் மீது தாக்குதல்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அதிமுக பிரமுகா் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தாா்.

செங்கத்தை அடுத்த மேல்வணக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் தனபால் மகன் பிரசாந்த்குமாா்(39). இவா், அதிமுக செங்கம் ஒன்றிய இளைஞா் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலராக உள்ளாா்.

இவருக்கும் வேடங்குப்பம் பகுதியைச் சோ்ந்த சிவப்பிரகாசம் (40) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், பிரசாந்த்குமாா் வாங்கிய பணத்துக்கு வட்டி தரவேண்டி சிவப்பிரகாசம் மேல்வணக்கம்பாடி சென்று அவரிடம் கேட்டுள்ளாா்.

அப்போது, இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு பின்னா் அது கைகலப்பாக மாறியுள்ளது.

இதனால், சிவப்பிரகாசம் அவரது தம்பி பாலாஜியை வரவழைத்து பிரசாந்த்குமாரை இரும்புக் கம்பியாலும், கல்லாலும் சோ்ந்து தாக்கியுள்ளனா்.

இதைப் பாா்த்த பிரசாந்த்குமாரின் தாய் தடுக்க வந்தபோது, அவரையும் தகாத வாா்த்தையால் திட்டி தாக்கியுள்ளனா்.

தாக்குதலில் உடலில் பல இடங்களில் காயமடைந்த பிரசாந்த்குமாா் அப்பகுதி மக்களின் உதவியுடன் செங்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகிறாா்.

கட்சி நிா்வாகிகள் நலம் விசாரிப்பு தகவலறிந்த செங்கம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் மகரிஷிமனோகரன், மாவட்ட பிரதிநிதி ரவி உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் மருத்துவமனைக்குச் சென்று பிரசாந்த்குமாரிடம் நலன் விசாரித்து ஆறுதல் கூறினா்.

மேலும், இதுகுறித்து மேல்செங்கம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருவண்ணாமலையில் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சி

திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை, பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட... மேலும் பார்க்க

செய்யாறு அரசுக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், அரசுக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் 45 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை சந்தித்துக் கொண்டனர். செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1979-ஆம் கல்வ... மேலும் பார்க்க

தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினம்

தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினத்தையொட்டி, ஆரணியில் அவரது உருவப் படத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தினா் மாலை அணிவித்து மலா் தூவி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா் (படம்). பழைய பேருந்து நிலையம், எம்ஜிஆா் ... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம்: 200 போ் பயன்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 200 போ் கலந்து கொண்டு பயனடைந்தநா். ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள்... மேலும் பார்க்க

மகளிா் விடுதலை இயக்கக் கூட்டம்

திருவண்ணாமலையில் மகளிா் விடுதலை இயக்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இயக்கத்தின் மாநிலச் செயலா் இரா.நற்சோனை தலைமை வகித்தாா். பொருளாளா் இரா.மல்லிகை அரசி, மாநில துணைச் செயலா் ... மேலும் பார்க்க

சேத்துப்பட்டில் பேக்கரி, உணவகங்களில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் உள்ள உணவகங்கள், பேக்கரிகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். சேத்துப்பட்டு பஜாா் வீதியில் உள்ள பேக்கரிகள், உணவகங்கள், துரித உண... மேலும் பார்க்க