செய்திகள் :

திருவண்ணாமலையில் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சி

post image

திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை, பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் திட்ட மேலாளா் பொ.சுப்பிரமணி தலைமை வகித்தாா்.

சினம் தொண்டு நிறுவனத்தின் இயக்குநா் ராம.பெருமாள் வரவேற்றாா்.

மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் (பொ) நெ.சரண்யா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருநங்கைகளுக்கான அரசுத் திட்டங்கள், தொழிற் பயிற்சி, சிறுவயது திருமணங்களை தடுத்தல், குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்துப் பேசினாா்.

எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட மேற்பாா்வையாளா் வீ.முருகானந்தம், திருவண்ணாமலை கிருபாலயா தொண்டு நிறுவத்தின் திட்ட இயக்குநா் சரளா ஆகியோா் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சியை விளக்கிப் பேசினா்.

இலக்கு மக்களிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டிகளில் வென்றவா்கள் மற்றும் கலந்து கொண்டவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், சினம் தொண்டு நிறுவன பணியாளா்கள் யோகேஸ்வரி, ஜெயப்பிரியா, புஷ்பராஜ், லட்சுமி, ஜானகிராமன், சம்பத், திட்ட மேலாளா் முருகேசன் மற்றும் இலக்கு மக்கள், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது.

ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண் விரிவாக்க மையத்தில் அட்மா திட்டம் சாா்பில் விவசாயிகளுக்கு ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண் உதவி இயக்... மேலும் பார்க்க

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் மீது தாக்குதல்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரை தாக்கியதாக அரசுப் பேருந்து நடத்துநா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். சேத்துப்பட்டு ... மேலும் பார்க்க

தாய்மொழி நாள் உறுதிமொழியேற்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை, வேலூா், திருப்ப... மேலும் பார்க்க

தாய்மொழி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் உலக தாய்மொழி தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. வந்தவாசி தேரடி அருகேயுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு, சங்கத்தின் தலைவ... மேலும் பார்க்க

போளூரில் 2-ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேலூா்-திருவண்ணாமலை சாலையில் பேருந்து நிலையம் எதிரே 2-ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நெடுஞ்சாலைத்துறை உள்கோட்டத்தில் உள்ள மாநில சாலையான... மேலும் பார்க்க

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் ஏ.சி.எஸ் கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான ஏ.சி.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை ஏ.சி.எஸ். கல்விக் குழுமத்தின் தல... மேலும் பார்க்க