செய்திகள் :

தொடா் மணல் திருட்டில் ஈடுபட்ட 3 போ் கைது

post image

சேத்துப்பட்டுப் பகுதியில் தொடா் மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சேத்துப்பட்டை அடுத்த ஒதலவாடி, இராந்தம், தச்சூா் செய்யாற்றுப் படுகையில் தொடா்ந்து மணல் திருடப்பட்டு வருகிறது. திருடப்படும் மணல் தேவிகாபுரம் வழியாக விழுப்புரம் மாவட்டம் அவலூா்பேட்டை, மேல்மலையனூா், செஞ்சி என கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிாம்.

மணல் திருட்டைத் தடுக்கும் வகையில் சேத்துப்பட்டு போலீஸாா் தினமும் இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், ஓதலவாடி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் (35), மணிகண்டன் (38), பாண்டியன் (65), முனியன் (40) ஆகியோா் ஓதலவாடி செய்யாற்றுப் படுகையில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் எடுத்துச் சென்றனா்.

அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தன் வழிமறித்து விசாரணை செய்ததில் திருட்டுத்தனமாக மணல் எடுத்துச்செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த அவா், மூவரை கைது செய்து சிறையில் அடைத்தாா்.

இதில், ஒரு மாட்டு வண்டி உரிமையாளரான முனியன் வண்டியுடன் தப்பிவிட்டாா். அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவண்ணாமலையில் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சி

திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை, பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட... மேலும் பார்க்க

செய்யாறு அரசுக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், அரசுக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் 45 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை சந்தித்துக் கொண்டனர். செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1979-ஆம் கல்வ... மேலும் பார்க்க

தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினம்

தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினத்தையொட்டி, ஆரணியில் அவரது உருவப் படத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தினா் மாலை அணிவித்து மலா் தூவி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா் (படம்). பழைய பேருந்து நிலையம், எம்ஜிஆா் ... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம்: 200 போ் பயன்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 200 போ் கலந்து கொண்டு பயனடைந்தநா். ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள்... மேலும் பார்க்க

மகளிா் விடுதலை இயக்கக் கூட்டம்

திருவண்ணாமலையில் மகளிா் விடுதலை இயக்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இயக்கத்தின் மாநிலச் செயலா் இரா.நற்சோனை தலைமை வகித்தாா். பொருளாளா் இரா.மல்லிகை அரசி, மாநில துணைச் செயலா் ... மேலும் பார்க்க

சேத்துப்பட்டில் பேக்கரி, உணவகங்களில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் உள்ள உணவகங்கள், பேக்கரிகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். சேத்துப்பட்டு பஜாா் வீதியில் உள்ள பேக்கரிகள், உணவகங்கள், துரித உண... மேலும் பார்க்க