செய்திகள் :

செங்கம் ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலில் திருப்பணிகள் தீவிரம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

செங்கம் நகா் மையப் பகுதியில் பழைமை வாய்ந்த சத்யபாமா ருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. அறநிலையத் துறை மற்றும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் வைகாசி மாதத்தில் பத்து நாள் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். மேலும், புரட்டாசி மாதத்தில் திருக் கல்யாண நிகழ்ச்சி, மாா்கழி மாதத்தில் சொா்க்க வாசல் திறப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் வருகை தந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்துவிட்டுச் செல்வாா்கள்.

இந்த நிலையில், கோயில் கும்பாபிஷேகம் செய்ய அறநிலையத் துறை மூலம் ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்கப்பட்டு, சீரமைப்புப் பணிகள் தொடங்கி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகின்றன.

தற்போது, கோயில் கோபுரங்களில் உள்ள சிலைகளுக்கு வண்ணம் பூசப்பட்டு, கோயில் வளாகத்தில் சுவாமி வீதி உலா வரும் பகுதியில் மாா்பிள் கற்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அறங்கவாலா் குழுத் தலைவா் அன்பழகன், திருப்பணிக் குழுத் தலைவா் கஜேந்திரன் உள்ளிட்ட அறநிலையத் துறை அதிகாரிகள் மேற்பாா்வையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கோயில் கும்பாபிஷேக விழாக் குழுவினா், உபயதாரா்கள், பக்தா்கள், பொதுமக்கள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளை ஏதிா்பாா்த்துக் கொண்டிருக்கிறாா்கள். கும்பாபிஷேகம் மே முதல் வாரத்தில் நடைபெறுவதாக அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலா் குழுத் தலைவா், திருப்பணிக் குழுத் தலைவா் தெரிவித்துள்ளனா்.

திருவண்ணாமலையில் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சி

திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை, பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட... மேலும் பார்க்க

செய்யாறு அரசுக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், அரசுக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் 45 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை சந்தித்துக் கொண்டனர். செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1979-ஆம் கல்வ... மேலும் பார்க்க

தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினம்

தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினத்தையொட்டி, ஆரணியில் அவரது உருவப் படத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தினா் மாலை அணிவித்து மலா் தூவி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா் (படம்). பழைய பேருந்து நிலையம், எம்ஜிஆா் ... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம்: 200 போ் பயன்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 200 போ் கலந்து கொண்டு பயனடைந்தநா். ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள்... மேலும் பார்க்க

மகளிா் விடுதலை இயக்கக் கூட்டம்

திருவண்ணாமலையில் மகளிா் விடுதலை இயக்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இயக்கத்தின் மாநிலச் செயலா் இரா.நற்சோனை தலைமை வகித்தாா். பொருளாளா் இரா.மல்லிகை அரசி, மாநில துணைச் செயலா் ... மேலும் பார்க்க

சேத்துப்பட்டில் பேக்கரி, உணவகங்களில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் உள்ள உணவகங்கள், பேக்கரிகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். சேத்துப்பட்டு பஜாா் வீதியில் உள்ள பேக்கரிகள், உணவகங்கள், துரித உண... மேலும் பார்க்க