செய்திகள் :

கேரளாவை உலுக்கிய சாலை விபத்து - ஓராண்டுக்கு பிறகு கோவையில் சிக்கிய குற்றவாளி

post image

கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே உள்ள வடகராவில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம், பேபி என்ற மூதாட்டியும்  அவரின் 9 வயது பேத்தி த்ரிஷ்னாவும் தேசிய நெடுஞ்சாலையை  கடக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அந்த வழியே அதிவேகமாக வந்த ஒரு கார் அவர்கள் இருவர் மீதும் மோதி விபத்து ஏற்படுத்தியது.

சாலை விபத்து

அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பேபி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். படுகாயமடைந்த த்ரிஷ்னா கோமாவுக்கு சென்றுவிட்டார்.

கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அந்த கார் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்பத்தியது. விபத்தை ஏற்படுத்திய காரை கண்டறிய முடியாமல் கேரளா காவல்துறை திணறியது.

விபத்து

கேரளா உயர் நீதிமன்றம், மனித உரிமை ஆணையமும் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது. தொடர் அழுத்தங்கள் காரணமாக காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தியது. அதில் விபத்தை ஏற்படுத்திய நபர் ஷஜீல் என்பது தெரியவந்தது.

அவர் விபத்தை ஏற்படுத்தி விட்டு துபாய் தப்பி சென்றது தெரியவந்தது. காவல்துறை விசாரணைக்கு அழைத்தும் அவர் ஆஜராகமல் இருந்து வந்தார். இதனால் காவல்துறையினர் விமான நிலையங்களில்  லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.

கோவை விமான நிலையம்

இந்நிலையில், ஷஜின் இன்று அதிகாலை துபாயில் இருந்து கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவரை குடியுரிமை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து, கேரள காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

மும்பை: பன்றி என நினைத்துச் சுட்டதில் இருவர் பலி; மறைக்க முயன்ற மக்கள்; வசமாகச் சிக்கிய குற்றவாளிகள்

மும்பையின் மையப்பகுதியில் வனப்பகுதி இருக்கிறது. அதில் சிறுத்தைகள் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். மும்பையையொட்டி இருக்கும் பால்கர் மாவட்டத்திலும் அதிக அளவில் வனப்பகுதி இருக்கிறது. இந்த வ... மேலும் பார்க்க

குன்னூர்: பற்றியெரிந்த குறிஞ்சி மலை... தீயை அணைக்க ராணுவத்தோடு கைகோத்த தீயணைப்பு வீரர்கள்!

நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தற்போது உறைபனி தாக்கம் காணப்படுகிறது. வனப்பகுதிகளில் பசுமை குறைந்து வறட்சி தொடங்கியிருக்கிறது. உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன. காட்டுத்தீ ... மேலும் பார்க்க

விருதுநகர்: மூலப்பொருள் உராய்வால் பட்டாசு ஆலையில் வெடி விபத்து; பெண் தொழிலாளர்‌ பலி.. பலர் படுகாயம்!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இடிபாடுகளில் சிக்கி பெண் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "வி... மேலும் பார்க்க

US Plane Crash: மோதி வெடித்த விமானம் - ஹெலிகாப்டர்; கண்ணிமைக்கும் நேரத்தில் விபரீதம்.. என்ன நடந்தது?

அமெரிக்காவின் அமெரிக்கன் ஏர்லைன்ஸின் பாம்பார்டியர் CRJ700 என்ற விமானம், ஹெலிகாப்டருடன் மோதி வெடித்துச் சிதறியது. இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம்.பயணிகள் ... மேலும் பார்க்க

US Plane Crash: `சடலமாக 18 உடல்கள் மீட்பு; ஒருவர் இந்தியர்..' -விமான விபத்தால் பெரும் சோகம்

அமெரிக்கா வாஷிங்டன்னில் வணிக விமானம் ஒன்று பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் மீது மோதி விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவம் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பொட்டமாக் நதிக்கு மேல் நடந்துள்ளது.... மேலும் பார்க்க

கூடலூர்: வனவிலங்கு வேட்டைக்கு சென்றபோது இளைஞர் மர்ம மரணம்... யானை மீது பழிபோட்டு தப்பிக்க முயற்சி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள தேவர்சோலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்ததாக கடந்த சனிக்கிழமையன்று அதிகாலை வனத்துறையினருக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். கூடலூர் அரசு மருத... மேலும் பார்க்க