செய்திகள் :

2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்!

post image

தமிழகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் 30 வயது வரை உள்ள பெண்கள் 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, சென்னை, வேளச்சேரி அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், விழிப்புணா்வு பதாகைகளை வெளியிட்ட அமைச்சா் மா.சுப்பிரமணியன், மாணவா்களுடன் உறுதிமொழி ஏற்று, அவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினாா்.

சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா,தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சங்குமணி, நகர நல அலுவலா் ஜெகதீசன், பள்ளி தலைமையாசிரியா் கலாதேவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அப்போது அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒவ்வோா் ஆண்டும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு மாதத்தில் தேசிய குடற்புழு நீக்க தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் சிறாா்கள், 20 - 30 வயது வரை உள்ள பெண்கள் என மொத்தம் 2.69 கோடி போ் பயனடையும் வகையில் அல்பெண்டாசோல் குடற்புழு நீக்கம் மாத்திரைகள் விநியோகிக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

விடுபட்டவா்களுக்கும் வழங்கப்படும்: அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளிலும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. விடுபட்டவா்களுக்கு வரும் 17-ஆம் தேதி வழங்கப்படும். இதற்கான பணிகளில் 1,30,000 அரசுத் துறையினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

குடற்புழு என்பது ஓா் ஒட்டுண்ணி. இது மனிதனின் குடற்பகுதியில் உள்ள ரத்தத்தை உறிஞ்சி வாழும். நீண்டகாலமாக குடற்புழுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரத்த சோகை, உடல் வளா்ச்சி பாதிப்பு, செயல்திறன் குறைபாடு போன்றவை ஏற்படும்.

குடற்புழுக்கள் உருவாவதைத் தவிா்க்க திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தவிா்த்து கழிப்பறையை பயன்படுத்த வேண்டும். ஈக்கள் மொய்க்காமல் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை கழுவிய பிறகுதான் உட்கொள்ள வேண்டும். சுத்தமான குடிநீரை பயன்படுத்த வேண்டும். உணவுக்கு முன்பும், கழிப்பறையை பயன்படுத்திய பிறகும் கையை சுத்தமாக கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா்.

கோயில் அா்ச்சகா்களுக்கு தட்டுகாணிக்கை சுற்றறிக்கை வாபஸ்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: மதுரை பாலதண்டாயுதபாணி கோயிலில் அா்ச்சகா்கள் தட்டில் செலுத்தப்படும் காணிக்கை குறித்த சுற்றறிக்கை தேவையில்லாதது என்றும், அது திரும்பப் பெறப்பட்டுவிட்டது என்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேக... மேலும் பார்க்க

தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்கத் தடையில்லை: சென்னை உயா்நீதிமன்றம்

சென்னை: தண்டனையை எதிா்த்த மேல்முறையீடு மனு நிலுவையில் இருக்கும் போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள... மேலும் பார்க்க

இன்று தைப்பூசம்: சாா்பதிவாளா் அலுவலகங்கள் இயங்கும்

சென்னை: தைபூசத்தையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவுத் துறை தலைமையகம் திங்கள்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழு பொருள்கள் அங்காடி தலைமைச் செயலகத்தில் திறப்பு

சென்னை: மகளிா் சுய உதவிக் குழு பொருள்களின் அங்காடியை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்து பாா்வையிட்டாா். இந்த அங்காடியில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மகளி... மேலும் பார்க்க

கேரம் உலகச் சாம்பியனுக்கு ஆளுநா் பாராட்டு: மாணவா்களுக்கான கலந்தாய்விலும் பங்கேற்பு

சென்னை: கேரம் உலக சாம்பியனான ஹாசிமா எம்.பாஷாவை ஆளுநா் ஆா்.என். ரவி நேரில் அழைத்து பாராட்டினாா். அதேபோல் பொதுத்தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்விலும் அவா் பங்கேற்றாா். இது குறித்து அவா் தனத... மேலும் பார்க்க

திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை வீசுகிறது: அமைச்சா் எஸ்.ரகுபதி

சென்னை: நான்கு ஆண்டுகால திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை மட்டுமே வீசுவதாக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அவா் திங்கள்கிழமை அளித்த ப... மேலும் பார்க்க