செய்திகள் :

தொடக்க ஆட்டக்காரராக பாபர் அசாம் களமிறங்க தலைமைப் பயிற்சியாளர் ஆதரவு!

post image

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரராக பாபர் அசாம் களமிறங்க வேண்டும் என அந்த அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளர் ஆக்யுப் ஜாவத் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் இன்னும் நான்கு நாள்களில் தொடங்கவுள்ளது. போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகிறது.

இதையும் படிக்க: ஆதிக்கத்துக்கு முடிவு..! ஒயிட்வாஷ் ஆனது ஆஸ்திரேலியா!

பாபர் அசாமுக்கு ஆதரவு

பிப்ரவரி 19 முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடங்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரராக பாபர் அசாம் களமிறங்க வேண்டும் என அந்த அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளர் ஆக்யுப் ஜாவத் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரில் பாபர் அசாமை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க ஆலோசித்து வருகிறோம். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் பாபர் அசாம் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். அதன் பின், சைம் ஆயூபுக்கு காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக, டெஸ்ட் போட்டிகளிலும் பாபர் அசாம் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார்.

இதையும் படிக்க: ஓராண்டில் 10 மாதங்களும் விளையாடினால் எப்படி? கபில் தேவ் விமர்சனம்

பாகிஸ்தானில் உள்ள ஆடுகளங்கள் தொடக்க வீரர்களாக களமிறங்குபவர்களுக்கு மிகுந்த சவாலானதாக இருக்காது. பேட்ஸ்மேன்களால் பவர் பிளே ஓவர்களில் நன்றாக ரன்கள் குவிக்க முடியும். பவர் பிளே ஓவர்களை எங்களது சிறந்த பேட்ஸ்மேன்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அதனால், இந்த ஆடுகளங்களில் பாபர் அசாம் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என நினைக்கிறேன். முக்கியமான போட்டிகளில் அவர் நன்றாக விளையாடிய அதிக ரன்கள் எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மிடில் ஆர்டர் பேட்டிங்கை பாராட்டிய ஸ்மிருதி மந்தனா!

ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் அசத்தலான மிடில் ஆர்டர் பேட்டிங்கை அந்த அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பாராட்டியுள்ளார்.மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்ரவரி 14) தொடங்கியது. தொடரின் முதல் ப... மேலும் பார்க்க

திறமை இருக்கிறது..! இளம் வீரர் ஜேக் பிரேசர்-மெக்கர்க்கை நம்பும் ஸ்டீவ் ஸ்மித்!

இலங்கை உடனான தொடரில் தோல்வியடைந்தாலும் இளம் வீரர்களை நம்புவதாக ஸ்மித் கூறியுள்ளார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. டெஸ்ட்... மேலும் பார்க்க

ஆதிக்கத்துக்கு முடிவு..! ஒயிட்வாஸ் ஆனது ஆஸ்திரேலியா!

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி தோல்வி தழுவியது.இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. டெஸ்ட் ... மேலும் பார்க்க

ஓராண்டில் 10 மாதங்களும் விளையாடினால் எப்படி? கபில் தேவ் விமர்சனம்

இந்திய வீரர்கள் ஓராண்டில் 10 மாதங்களும் விளையாடினால் காயம்தான் ஏற்படுமென கபில் தேவ் கூறியுள்ளார்.இந்தியாவின் என்சிஏ (தேசிய கிரிக்கெட் அகாதெமி) காயமடைந்தவர்களின் முகாந்திரமாக மாறி வருகிறது. பிஜிடி தொடர... மேலும் பார்க்க

அதிவேக 6000* ரன்கள்..! ஆம்லா சாதனையை சமன் செய்தார் பாபர் அசாம்!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக பாகிஸ்தான் - நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிக... மேலும் பார்க்க

அசிதா பெர்னாண்டோ அசத்தல்: 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸி.!

இலங்கைக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளை இழந்து ஆஸி. தடுமாறி வருகிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையான வென்ற ஆஸி. அணி முதல் ஒருநாள் போட்டியில் மோசமாக விளையாடி தோல்விய... மேலும் பார்க்க