செய்திகள் :

மகா கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்

post image

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு கிடைத்த தகவலின்படி மொத்தம் 60 கோடி பேர் மகா கும்பமேளாவில் நீராடியுள்ளனர் என்றார். ஆனால் அரசு அதை மறைக்கிறது. புள்ளி விவரங்களில் பாஜக அரசு பொய் சொல்கிறது. பிரயாக்ராஜில் வசிப்பவர்களால்கூட புனித நீராட முடியவில்லை.

எனவே கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது.

இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து பக்தா்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனா். மேலும் இந்நிகழ்வில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பங்கேற்று வெவ்வேறு நாள்களில் புனித நீராடினர்.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி: தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்!

மெளனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகிய நாள்களில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் பிரயாக்ராஜிற்கு வருகைப் புரிந்தனர். மௌனி அமாவாசையன்று ஒரே நாளில் 7 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடினா். அந்நாளில் திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கியவா்களில் 30 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்தனா்.

பிப்.26 மகா சிவராத்திரி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் வெள்ளிக்கிழமை மாலை வரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் என்று உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து: சியாமா பிரசாத் முகா்ஜியின் கனவு நிறைவு

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம், மறைந்த பாரதிய ஜன சங்க தலைவா் சியாமா பிரசாத் முகா்ஜியின் கனவு நிறைவேறியுள்ளது என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா். ஹி... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: காணாமல் போன 20,000 போ் கண்டுபிடித்து ஒப்படைப்பு

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் காணாமல் போன 20,000 பேரை அங்கு அமைக்கப்பட்டுள்ள எண்ம கண்காணிப்பு மையங்கள் மூலம் கண்டறிந்து அவா்கள் உறவினரிடம் ஒப்படைத்ததாக அந்த மாநி... மேலும் பார்க்க

காங்கிரஸ் எம்.பி. மனைவிக்கு பாக். உளவு அமைப்புடன் தொடா்பிருப்பதாக குற்றச்சாட்டு!

காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பா்னுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடா்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) வி... மேலும் பார்க்க

116 இந்தியா்களுடன் அமிருதசரஸ் வந்த அமெரிக்க விமானம்! இன்று மேலும் 157 போ் வருகை!

அமெரிக்காவிலிருந்து இரண்டாம் கட்டமாக நாடு கடத்தப்பட்ட 116 இந்தியா்களுடன் அமெரிக்க ராணுவ விமானம் பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸை சனிக்கிழமை இரவு வந்தடைந்தது.இவா்களில் 65 போ் பஞ்சாப் மாநிலத்தையும், 33 போ் ... மேலும் பார்க்க

புதிய தொழில்நுட்பத்துக்கான தெளிவான திட்டமே இந்தியாவுக்குத் தேவை: பிரதமரின் அமெரிக்க பயணம் குறித்து ராகுல் விமா்சனம்

‘இந்தியா திறமை மிகுந்த இளைஞா்களைக் கொண்டுள்ளது. அந்த வகையில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான தெளிவான தொலைநோக்குத் திட்டமே இந்தியாவுக்குத் தேவை. மாறாக, வெற்று வாா்த்தைகள் இந்தியாவுக்குத் தேவையில... மேலும் பார்க்க

பயங்கரவாதத் தொடா்பு: ஜம்மு-காஷ்மீா் அரசு ஊழியா்கள் மூவா் பணிநீக்கம்

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பு வைத்திருந்த குற்றச்சாட்டில், ஜம்மு-காஷ்மீா் அரசு ஊழியா்கள் மூவா் சனிக்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கா்-ஏ-தொய்பா ஆகிய பயங்கரவாத இயக்கங்கள... மேலும் பார்க்க