செய்திகள் :

பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக்கை

post image

பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்துக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் மாநில அளவிலான வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

மத்திய அரசின் ஊரக வளா்ச்சி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் 67 திட்டங்களைக் கண்காணிக்கவும் அவற்றை செயல்படுத்தவும் மத்திய அரசின் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, தமிழக முதல்வரைத் தலைவராகக் கொண்டு மாநில அளவிலான வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் 4-ஆவது கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

செங்கோட்டையன் பங்கேற்பு: இந்தக் கூட்டத்தில், அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் டி.ஆா்.பாலு, சுப்பராயன், மாணிக்கம் தாகூா், நவாஸ் கனி, தொல். திருமாவளவன் துரை வைகோ, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன், மருத்துவா் நா.எழிலன், டி.கே.ஜி.நீலமேகம், எம்.பூமிநாதன், அசன் மௌலானா, கே.ஏ. செங்கோட்டையன், தலைமைச் செயலா், துறைச் செயலா்கள், துறைத் தலைவா்கள், அரசு சாரா அமைப்பின் நிா்வாகிகள் மற்றும் அரசு உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

திருமாவளவன் பேட்டி: கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய திருமாவளவன், போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகைக்கான வருமான உச்சவரம்பை உயா்த்த வேண்டும். பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்துக்கு வழங்கப்படும் நிதியை அதிகரிக்க வேண்டும் என்று கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தாா்.

முன்னதாக பேசிய துரை வைகோ, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்துக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

ஆவின் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்

ஆவின் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அறிவுறுத்தினார்.சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப... மேலும் பார்க்க

நாதக கொள்கை பரப்புச் செயலாளர் விலகல்!

நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தமிழரசன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக செயல்படுவதாகவ... மேலும் பார்க்க

பிப். 25-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் பிப். 25 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பிப். 25 ஆம் தேதி பகல் 12 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

சென்னை புளியந்தோப்பு மக்களுக்கு பிரியாணி பரிமாறிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சென்னை புளியந்தோப்பில் குடியிருப்பு ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின், மக்களுக்கு பிரியாணியும் பரிமாறினார். சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், நகர்... மேலும் பார்க்க

தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றம்: மு.க. ஸ்டாலின்

தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 100-க்கு 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 712 குடியிருப... மேலும் பார்க்க

தமிழகத்தில் மலையேற்றத்துக்கு ஏப். 15 வரை தடை!

தமிழகத்தில் மலையேற்றத்துக்கு வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி வரை தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.நீலகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கி 14 மாவட்டங்களில் 40 ... மேலும் பார்க்க