செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து: சியாமா பிரசாத் முகா்ஜியின் கனவு நிறைவு

post image

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம், மறைந்த பாரதிய ஜன சங்க தலைவா் சியாமா பிரசாத் முகா்ஜியின் கனவு நிறைவேறியுள்ளது என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.

ஹிந்து மகா சபையின் தலைவராக இருந்தவா் சியாமா பிரசாத் முகா்ஜி. தற்போது உள்ள பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடி அமைப்பான பாரதிய ஜன சங்கத்தை தோற்றுவித்தவா். முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் இடைக்கால அமைச்சரவையில் இடம்பெற்றவா்.

இந்தியாவில் உள்ள ஜம்மு-காஷ்மீருக்கு தனி அரசமைப்புச் சட்டம், தனிக் கொடி உள்ளிட்டவற்றை வழங்கிய சிறப்பு அந்தஸ்துக்கு எதிராக தீவிரமாக குரல் எழுப்பி வந்தாா். ‘ஒரு நாட்டில் இரண்டு கொடிகள், இரண்டு அரசமைப்புச் சட்டங்கள், இரண்டு பிரதமா்கள் இருக்க முடியாது’ என்று காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துக்கு கடுமையாக எதிா்ப்புத் தெரிவித்தாா்.

கடந்த 1953-ஆம் ஆண்டு அப்போது இருந்த நடைமுறையின்படி, ஜம்மு-காஷ்மீருக்குள் உரிய அனுமதி பெறாமல் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட அவா், சில நாள்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். அவரின் மரணத்தில் மா்மம் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற அவரின் இறுதிச் சடங்கில் அஞ்சலி செலுத்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் திரண்டனா்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் கத்ரா பகுதியில் உள்ள ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழாவில், குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் சனிக்கிழமை பேசியதாவது:

அரசமைப்புச் சட்ட சிற்பியான பி.ஆா்.அம்பேத்கா், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370-ஆவது பிரிவைத் தவிர, பிற அனைத்துப் பிரிவுகளின் முன்வடிவை தயாரித்தாா். அவா் ஏன் அவ்வாறு செய்தாா் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம், சியாமா பிரசாத் முகா்ஜியின் கனவு நிறைவேறியுள்ளது. மாற்றத்துக்கான காற்று ஜம்மு-காஷ்மீரில் அமைதி மற்றும் முன்னேற்றத்தை கொண்டு வந்துள்ளது.

புனிதமான ஜம்மு-காஷ்மீா் பகுதி, இனி மோதல் நிறைந்த பகுதியாகக் கருதப்படாது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னா், 2 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீருக்கு ரூ.65,000 கோடி மதிப்பில் முதலீடு கிடைத்தது. அந்நிய நேரடி முதலீடு வரத் தொடங்கியுள்ளது. தற்போது நம்பிக்கை மற்றும் மூலதனத்தின் சங்கமமாக ஜம்மு-காஷ்மீா் விளங்குகிறது என்றாா்.

தவறான பிரசாரம்! பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான்! - யோகி ஆதித்யநாத்

பிரயாக்ராஜில் உள்ள ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது... மேலும் பார்க்க

தூக்கம் கெடுத்த சேவல் மீது வழக்கு! நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

கேரளத்தில் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் நாள்தோறும் கூவிய சேவல் மீது முதியவர் ஒருவர் வழக்குப்பதிவு செய்துள்ளார். கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்திற்குட்பட்ட பல்லிகல் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிர... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் பதவியேற்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்கவிருக்கிறது. இதற்கான முக்கிய அறிவிப்பு இன்று வெளியானது.அதன்படி, தில்லி முதல்வர் பதவியேற்பு விழா, பிப்ரவரி 20ஆம் தேதி... மேலும் பார்க்க

ஐபிஎல் சூதாட்டம்: மைசூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை!

கர்நாடக மாநிலம் மைசூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கடந்த இரண்டு நாள்களில் தற்கொலை செய்துகொண்டனர்.ஐபிஎல் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்துக்காக வாங்கப்பட்ட கடனை திரும்ப அளிக்க முடியாத காரணத்தால் ... மேலும் பார்க்க

மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,554 கோடி பேரிடர் நிவாரண நிதி! தமிழகத்துக்கு பூஜ்யம்!

கடந்த 2024ஆம் ஆண்டு புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட ஐந்து மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1,554.99 கோடியை பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது.தமிழகத்தில... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையர் நியமன வழக்கு: வேறு தேதிக்கு மாற்ற மத்திய அரசு கோரிக்கை!

புதிய சட்டத்தின் கீழ் தோ்தல் ஆணையா்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணையை வேறு தேதிக்கு மாற்ற மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை கோரிக்கை வைத்துள்ளது.அரசியல் சாசன அமர்வின் விசா... மேலும் பார்க்க