செய்திகள் :

``Elon Musk -ஐ விட புத்திசாலியான ஆளை தேடினேன்.." - ட்ரம்ப் கூறியதென்ன?

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசு செயல்திறன் துறைக்கு (Department of Government Efficiency - DOGE) தலைமைத்தாங்க உலகப் பணக்காரரான எலான் மஸ்கை அழைத்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

ஃபாக்ஸ் நியூஸுக்கு அவர் அளித்த பேட்டியில், DOGE-க்கு தலைமை தாங்க எலான் மஸ்கை விட புத்திசாலியான ஒருவரைத் தேடியதாக அவர் கூறியுள்ளார்.

ட்ரம்ப் கடந்த மாதம் அதிபராக பதவியேற்ற பிறகு, எலான் மஸ்க் உடன் இணைந்து அளிக்கும் முதல் நேர்காணல் இது. உலக நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வந்த உதவித் தொகைகளை நிறுத்திய பிறகு இது நிகழ்ந்துள்ளது.

தொழிலதிபர் எலான் மஸ்கை தனது நிர்வாகத்தின் தலைமை செலவு குறைப்பாளராக நியமித்த காரணத்தையும் கூறிய ட்ரம்ப், "இவர் (Elon Musk) சிறந்தவர்தான்... ஆனால் நான் இவரை விட புத்திசாலியான நபரைத் தேடினேன். முழுவதுமாக தேடினேன்... என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. என்னால் இவரை விட புத்திசாலியாக யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை சரியா? அதனால்தான் நாங்கள் நாட்டுக்காக இவரை நியமிக்க வேண்டியதாக இருந்தது." என்றார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, "என்னை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி" எனக் கூறினார் எலான் மஸ்க்.

அரசு நிர்வாகத்தை சரிசெய்வதாக டொனால்ட் ட்ரம்ப் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார். அதன் அடிப்படியிலேயே DOGE உருவாக்கப்பட்டது. இந்த துறை செலவீனங்களைக் குறைப்பதற்காக கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் அதிகாரம் செலுத்தி வருகிறது. ஆயிரக்கணக்கான வேலைகளை ரத்து செய்துள்ளது.

இதற்கு எதிராக ஜனநாயக கட்சி ஆளும் அமெரிக்க மாகாணங்கள், லிபரல் சார்பு சட்ட குழுக்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.

DOGE -யின் வேலைகளைப் பாராட்டிய ட்ரம்ப், அதன் உறுப்பினர்கள் எலான் மஸ்கை விட மோசமான ஆடை அணிவதாக கூறினார். "மஸ்க் நிர்வாகத்தின் உத்தரவை ஏற்று நூறு மேதைகளுடன் இணைந்து பணியாற்றுகிறார். அவருடன் அவரை விட மோசமாக ஆடை அணியும் சில புத்திசாலித்தனமான இளைஞர்கள் பணியாற்றுகின்றனர்... அவர்கள் வெறும் டி-சர்ட்களைத்தான் அணிகிறார்கள்" என்றார் ட்ரம்ப்.

இந்த நேர்காணலில், "ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது, அரசமைப்பை சரி செய்வதற்கான வாய்ப்பு" எனக் கூறினார் எலான் மஸ்க்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``உத்தரகாண்டில் வெளிமாநிலத்தவர்கள் விவசாய நிலம் வாங்கத் தடை'' - பா.ஜ.க அரசு முடிவு!

நாட்டில் சிக்கிம், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை இருந்தது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகை விலக்கிக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, இப்போது அந்த மாநிலத்தில... மேலும் பார்க்க

விகடன் இணையதளம் முடக்கம்: ``பாசிச ஊடுருவலின் அடையாளம்" -ஷாஜி என்.கருண் கண்டனம்

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியதாக நூற்றுக்கணக்கான இந்தியர்களை, அந்நாட்டு ராணுவம் கைகால்களில் விலங்கிட்டு சொந்த இந்தியாவுக்கு திருப்பியனுப்பிய விவகாரத்தில், பிரதமர் மோடி எதுவும் கூறாமல் அமைதிய... மேலும் பார்க்க

``பாக்கெட்டில் இருந்து காசு கேட்கவில்லை” -மோடி, நிர்மலா சீதாராமனை சாடிய காங்கிரஸ் எம்.பி.!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கைக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட மயிலாடுதுறை சுதா எம்.பி, செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மத்திய பட்ஜெட்டில், தம... மேலும் பார்க்க

US: கை, கால்களில் விலங்கிடும் அமெரிக்கா - வெள்ளை மாளிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ; மஸ்க் ரியாக்‌ஷன்

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் முக்கியமானது, அமெரிக்காவில் சட்டவிரோதக் குடியேறிகளை நாட்டை விட்டு வெளியேற்றும் அறிவிப்பு. மெக்சிகோ... மேலும் பார்க்க

நாமக்கல்: குடியிருப்பு பகுதியில் நடைபாதையை அடைத்த இன்ஜினியர் -நடவடிக்கை எடுத்த ஆட்சியர்!

நாமக்கல் மாநகராட்சி 19 -வது வார்டில் கலைவாணர் நகர் உள்ளது. இங்கு அரசின் இலவச வீட்டு மனை பட்டா பெற்று 33 குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுக்கு மேலாக வசித்து வருகின்றனர் இவர்கள் குடியிருப்பில் இருந்து நரசிம... மேலும் பார்க்க