தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க மறுப்பது மத்திய அரசு இழைக்கும் துரோகம்! -இபிஎஸ...
``பாக்கெட்டில் இருந்து காசு கேட்கவில்லை” -மோடி, நிர்மலா சீதாராமனை சாடிய காங்கிரஸ் எம்.பி.!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கைக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட மயிலாடுதுறை சுதா எம்.பி, செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மத்திய பட்ஜெட்டில், தமிழகத்திற்கு ஏதாவது ஒரு நிதியை, நிதியமைச்சரும், பிரதமர் மோடியும் ஓதுக்கீடு செய்வார்கள் என தமிழக எம்.பிக்கள் நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் சிறிய அறிவிப்புகள் கூட இல்லை. தமிழகத்தை வெறுப்பு உணர்வோடு தான் நிதியமைச்சர் பார்க்கிறார்.
திருக்குறள், தமிழ் என பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால், தமிழக மக்களையும், மண்ணையும் வெறுப்பது போல தான் மோடி நடந்துக் கொள்கிறார். பிரதமர் மோடி மற்றும் நிர்மலா சீதாராமன் பாக்கெட்டில் இருந்து காசு கேட்கவில்லை. நாம் செலுத்தும் வரியை கேட்கிறோம். ஆனால், தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்திற்கான நிதியை கேட்பதை விட, மற்ற கதைகளை பேசி வருகிறார்.
கல்விக்கு இந்தாண்டு வர வேண்டிய 4,500 கோடி ரூபாய் கேட்டால், மும்மொழி கொள்கையை ஒத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. ஒரு போதும் மத்திய அரசின் சர்வாதிகார போக்கிற்கு, தமிழ் மக்களும், மண்ணும், உணர்வாளர்களும் தலை வணங்க மாட்டோம். தமிழ் மொழியை கற்றவர்கள் உலக அரங்கில் தலைசிறந்தவர்களாக உள்ளனர். இந்தியை நாங்கள் வெறுக்கவில்லை. திணிக்க வேண்டாம் என்கிறோம்.

பிரதமர் மோடி, தமிழ் மொழியை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், தமிழக மக்களுக்கு அவர் செய்வது பெரிய துரோகம். கல்விக்கான தொகையை கேட்கிறோம் என்பதற்காக திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து திசை திரும்புகிறார்கள். முருகனின் பெயரை வைத்தக்கொண்டு எல்லா வித்தைகளையும் செய்து வருகிறார்கள். முருகனே வந்து திருத்தினாலும், இவர்கள் திருந்த மாட்டார்கள். ஆர்.எஸ்.எஸ் கும்பலை முருகன் ஒருநாள் வதம் செய்வார்" என்றார்.