செய்திகள் :

நாமக்கல்: குடியிருப்பு பகுதியில் நடைபாதையை அடைத்த இன்ஜினியர் -நடவடிக்கை எடுத்த ஆட்சியர்!

post image

நாமக்கல் மாநகராட்சி 19 -வது வார்டில் கலைவாணர் நகர் உள்ளது. இங்கு அரசின் இலவச வீட்டு மனை பட்டா பெற்று 33 குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுக்கு மேலாக வசித்து வருகின்றனர் இவர்கள் குடியிருப்பில் இருந்து நரசிம்ம சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தை வழித்தடமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

அந்த இடத்தில் நடந்து செல்வதற்கு வசதியாக ரோடு போட்டு தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வார்டு கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மூலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனு அளித்திருந்தனர். ஆனால், அறநிலைத்துறை அதிகாரிகள் கோயிலுக்கு சொந்தமான இடத்தை வழித்தடமாக பயன்படுத்தக் கூடாது என கூறி வந்தனர்.

நாமக்கல் ஆட்சியர் உமா (Namakkal Collector Uma)

இந்த நிலையில், நேற்று முன்தினம் கோயில் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் கட்டும் பணி அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்டது இந்த பணியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். இதை ஒட்டி அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ் குமார் எம்.பி, ஆட்சியர் உமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு வந்த ஆட்சியர் உமாவிடம் அப்பகுதி மக்கள் எங்களுக்கு நடந்து செல்ல வழிப்பாதை வேண்டும் தற்போது கோயில் பணியாளர்களுக்கு குடியிருப்பு கட்ட முழு இடத்தையும் பயன்படுத்துவதால் வழிப்பாதை இல்லாத நிலை ஏற்படும். எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

நாமக்கல்

இதையடுத்து ஆட்சியர், மேப் போட்ட இன்ஜினியர் யார் எனக் கேட்டு அழைத்து பிரச்னை குறித்து கேட்டறிந்தார். அப்போது, மக்கள் செல்லும் வழித்தடத்தை அடைத்து எவ்வாறு கட்டடம் கட்ட பிளான் போட்டீர்கள். இங்குள்ள 33 குடும்பத்தினர் காலம் காலமாக பயன்படுத்தி வரும் வழித்தடத்தை அடைத்து விட்டால் அவர்கள் எவ்வாறு சென்று வருவார்கள். மறுபுறம் பட்டா நிலம் உள்ளது. பட்டா நிலத்தினர் பாதையை அடைத்து விட்டார்கள். கடந்த 2000 ஆண்டு நமது அரசாங்கம் இவர்களுக்கு பட்டா வழங்கியுள்ளது. நீங்கள் பாதையை விட்டுவிட்டு கட்டடம் கட்டுங்கள். இந்த இடம் சாலையாக தான் இருக்க வேண்டும். தேவையில்லாமல் சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த வேண்டாம் என்று இன்ஜினியருக்கு டோஸ் விட்டார். அதன் மூலம் பொதுமக்கள் பயன்படுத்த வழிப்பாதை விட்டு கட்டடம் கட்ட ஒப்புக்கொண்டனர்.

``உத்தரகாண்டில் வெளிமாநிலத்தவர்கள் விவசாய நிலம் வாங்கத் தடை'' - பா.ஜ.க அரசு முடிவு!

நாட்டில் சிக்கிம், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை இருந்தது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகை விலக்கிக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, இப்போது அந்த மாநிலத்தில... மேலும் பார்க்க

விகடன் இணையதளம் முடக்கம்: ``பாசிச ஊடுருவலின் அடையாளம்" -ஷாஜி என்.கருண் கண்டனம்

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியதாக நூற்றுக்கணக்கான இந்தியர்களை, அந்நாட்டு ராணுவம் கைகால்களில் விலங்கிட்டு சொந்த இந்தியாவுக்கு திருப்பியனுப்பிய விவகாரத்தில், பிரதமர் மோடி எதுவும் கூறாமல் அமைதிய... மேலும் பார்க்க

``பாக்கெட்டில் இருந்து காசு கேட்கவில்லை” -மோடி, நிர்மலா சீதாராமனை சாடிய காங்கிரஸ் எம்.பி.!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கைக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட மயிலாடுதுறை சுதா எம்.பி, செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மத்திய பட்ஜெட்டில், தம... மேலும் பார்க்க

``Elon Musk -ஐ விட புத்திசாலியான ஆளை தேடினேன்.." - ட்ரம்ப் கூறியதென்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசு செயல்திறன் துறைக்கு (Department of Government Efficiency - DOGE) தலைமைத்தாங்க உலகப் பணக்காரரான எலான் மஸ்கை அழைத்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ஃபாக்ஸ் நி... மேலும் பார்க்க

US: கை, கால்களில் விலங்கிடும் அமெரிக்கா - வெள்ளை மாளிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ; மஸ்க் ரியாக்‌ஷன்

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் முக்கியமானது, அமெரிக்காவில் சட்டவிரோதக் குடியேறிகளை நாட்டை விட்டு வெளியேற்றும் அறிவிப்பு. மெக்சிகோ... மேலும் பார்க்க

`இந்தியாவிடம் நிறைய பணம் இருக்கிறது; பின், எதற்கு நம் டாலர்கள்?!' -எலான் மஸ்க்கை வழிமொழியும் ட்ரம்ப்

சமீபத்தில் தொழிலதிபர் மற்றும் அமெரிக்காவின் அரசு செயல்திறன் துறையில் அங்கம் வகிக்கும் எலான் மஸ்க், 'இதுவரை இந்தியாவின் வாக்களிக்கும் சதவிகிதத்தை அதிகரிக்க அமெரிக்கா இந்தியாவிற்கு தந்து வந்த 21 மில்லிய... மேலும் பார்க்க