செய்திகள் :

திருச்சியில் ஜல்லிக்கட்டு அரங்கம்: அடிக்கல் நாட்டினார் உதயநிதி!

post image

திருச்சி: திருச்சியில் ரூ.3 கோடி மதிப்பில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு அரங்கத்துக்கு துணை முதல்வர் உதயநிதி அடிக்கல் நாட்டினார்.

விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசு தமிழகத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பொங்கல் விழாவை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

திருச்சியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் திருச்சி, திருவாரூர், பெரம்பலூர் அருகில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் 700க்கு மேற்பட்ட காளைகளும் கலந்து கொள்ளும்.

ஜல்லிக்கட்டை காண்பதற்கு லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். இந்த வகையில் பெருமைப்பெற்ற இந்த ஜல்லிக்கட்டுக்காக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சூரியூர் பகுதியில் 5ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்ட அரசு திட்டமிட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கான அரசாணையை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுதுறை சார்பில் கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி வெளியிடப்பட்டது.

அதன்படி இன்று தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

இந்த அரங்கத்தில் அலுவலகம், முக்கிய விருந்தினர் தங்குவதற்கான அறைகள், ஜல்லிக்கட்டு வீரர்கள் மாற்றுவதற்கான அறைகள், ஜல்லிக்கட்டு மைதானத்தில் இரண்டு பகுதிகளிலும் பார்வையாளர் பார்ப்பதற்கான பிரம்மாண்ட பார்வையாளர் மாடம் அமைய உள்ளது. இதில் சுமார் 810 பேர் அமரும் வகையில் அமைக்கப்படவிருக்கிறது.

மற்றும் உடற்பயிற்சி அரங்கம், உள் விளையாட்டு அரங்கம் ஆகியவையும் அமைய உள்ளது. இப்பணிகள் அனைத்தும் வரும் 9 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவது குறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாளை இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் கூட்டம் நடத்தப்பட உள்ளது அதிலும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளோம்.

மத்திய அரசிடம் இருந்து எந்த நிதியும் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறார்கள் என தெரிவித்தார்.

உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 1.25 லட்சம் பறிமுதல்

சென்னை எழும்பூரில் ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 1.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. எழும்பூரில் உள்ள கென்னத்லேன் பகுதியில் உள்ள பிரபலமான ஹோட்டலில் சிலா் சட்ட விரோதமாக வெளிநாட்ட... மேலும் பார்க்க

அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்

இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கல்விக் கொள்கையை வகுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது என சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய பன்னாட்டுக் கருத்தரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா... மேலும் பார்க்க

தீண்டாமையை தடுக்க மாணவா்கள் துணிவுடன் செயல்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

தீண்டாமையை தடுக்க மாணவா்கள் துணிவுடன் செயல்பட வேண்டும் என ஆளுநா்ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியின் 50-ஆவது ஆண்டையொட்டி, ‘சமூகப் பணியில் சுவாமி விவேகானந்தரின்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

தமிழ்நாட்டின் நிதி சாா்ந்த கோரிக்கைகளில் முற்போக்கான அணுகுமுறையை 16-ஆவது நிதி ஆணையம் கடைப்பிடிக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா். முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டம... மேலும் பார்க்க

உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகரிப்பு

தமிழக உள் மாவட்டங்களில் வியாழக்கிழமை 97 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெள்ளிக்கிழமை (பிப்.21) முதல் பிப்.26-ஆம் தேதி... மேலும் பார்க்க

புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு பல்லுறுப்பு மாற்ற சிகிச்சை

குடல்வால் அழற்சி சாா்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயிற்றில் பல்லுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்தனா். இது குற... மேலும் பார்க்க