செய்திகள் :

'பிரசாந்த் கிஷோர் தான் வர வேண்டுமா... உங்களுக்கு மூளை இல்லையா?' - சீமான் கேள்வி

post image

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

"எனக்கு யாரிடம் இருந்து பாதுகாப்பு தேவை இருக்கிறது. இந்த மக்களுக்காக களத்துக்கு வந்திருக்கிறேன். நான் தான் இந்த மக்களுக்கு பாதுகாப்பு.

காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது சைரன் வைத்த வாகனம் வேண்டாம் என்று சொன்னார். வந்த வாகனத்தை திரும்பி போக சொன்னவர் அவர்.

மக்கள் அரசியலில் பாதுகாப்பு தேவையில்லை. தம்பி விஜய் போல புகழ்பெற்ற நடிகருக்கு என்னை மாதிரி இருப்பது சிரமம். என்னைப்போல நின்று பேச முடியாது. அதனால் அவர் பாதுகாப்பு கேட்டு வாங்கி இருப்பார்.

பிரசாந்த் கிஷோர்
சீமான்

நாங்கள் ஓட்டு பிச்சை எடுக்கிறோம். அண்ணாமலை என்ன செய்கிறார். அவர்களே வீட்டில் வந்து கொடுக்கிறார்களா.

கட்சி அரசியல், தேர்தல் அரசியலையே வியூக வகுப்பாளர்கள் செய்கின்றனர், அவர்கள் மக்கள் அரசியலை முன்னெடுப்பதில்லை. தேர்தல் வியூக வகுப்பாளர்களால் வெல்வது மட்டும் என்றால்... அது வியாபாரம். மக்கள் அரசியல் எப்போது வரும்.

தவெக தலைவர் விஜய்க்கு ஜான் ஆரோக்கியசாமி என்பவர் வியூக ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்,

ஆதவ் அர்ஜுனா என்ற வியூக பொறுப்பாளர் இருக்கிறார்.

இவர்களுக்கு இந்த மண்ணின் சிக்கல்கள் எப்படி தெரியும்.

பீகாரில் இருந்து ஒருத்தர் வரவேண்டும் என்றால் உங்களுக்கெல்லாம் மூளை இல்லையா. தமிழகத்தில் யாருக்கும் மூளை எதுவும் இல்லை என்று நினைக்க மாட்டார்களா?

ஜான் ஆரோக்கியசாமி

திருப்பரங்குன்றம், அத்திக்கடவு அவிநாசி பிரச்னை, நொய்யல் பிரச்னை எல்லாம் பிரசாந்த் கிஷோருக்கு தெரியுமா.

கருணாநிதி, ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இருந்த வரை வியூக வகுப்பாளர்களுக்கு தேவை இருந்ததா.

திமுகவில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஆ.ராசா உள்ளிட்டவர்களை விட பிரசாந்த் கிஷோர் போன்றோர் பெரிய ஆளா. இதை தன்மான இழப்பாக பார்க்கிறேன். ஜான் ஆரோக்கியசாமி எங்களுக்கு வேலை செய்யவில்லை. கட்சி கடந்து எங்களுக்குள் ஒரு உறவு இருந்தது, ஒப்பந்தம் போட்டு சம்பளம் கொடுத்து எல்லாம் வேலை செய்யவில்லை. எங்கள் மீதான அக்கறை காரணமாக ஒரு சில முறை ஆலோசனை மட்டுமே சொல்லியிருக்கின்றார். பாண்டே, ரவீந்திரன் துரைசாமி போன்றவர்களும் எங்களுக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். வெவ்வேறு கட்சியில் இருப்பவர்களும் ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள்,

அதெல்லாம் யார் என சொன்னால் பிரச்னையாகிவிடும்." என்றார்.

Manipur: ``குடியரசு தலைவர் ஆட்சியைத் திரும்பப் பெறுங்கள்" - மணிப்பூரில் போராட்டத்தில் இறங்கிய மக்கள்

மணிப்பூரில் 2024 மே மாதத்தில் குக்கி, மெய்தி சமூகத்தினருக்கு இடையே வெடித்த மோதல், இன்னும் ஓயாமல் இருக்கிறது. பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களைப் பிரதமர் மோடி ஒருமுறை கூட நேரில் சென்று பார்க்கவில்... மேலும் பார்க்க

NEP: ``தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லையென்றால் நிதி கிடைக்காது" - மத்திய அமைச்சர் ஓப்பன் டாக்

மத்திய அரசின் மும்மொழி கொள்கை உள்ளிட்ட காரணங்களால் தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு இன்னும் ஏற்காமல் இருக்கிறது. மேலும், தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால், கல்விக்கு மத்திய அரசு தரப்பில் ஒதுக்க வேண்... மேலும் பார்க்க

'கள்ளச்சாராய வியாபாரத்தை மூடி மறைக்கும் காவல்துறையே...' - கடுமையாக சாடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

மயிலாடுதுறையில் கள்ளச்சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்ட விவகாரத்தில் ஹரிஸ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், 'கள்ளச்சாராயத்தை ஒழிக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்ல... மேலும் பார்க்க

இரட்டைப் படுகொலை: `விசாரணைக்கு முன்பே தீர்ப்பெழுதுவதுதான் ஸ்டாலின் மாடலா?'- சாடும் எதிர்க்கட்சிகள்

மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் இளைஞர்கள் இரண்டு பேர் நேற்றிரவு அதே பகுதியைச் சேர்ந்த மூவரால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தைப் பொறுத்த... மேலும் பார்க்க

'கோபாலபுரம் தாண்டி வெளியில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' - அண்ணாமலை

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அமெரிக்காவில் தற்போது 29 லட்சம் இந்தியர்கள் இருக்கிறார்கள். அமெரிக்க அரசு 7,50,000 பேர் விதிகளை மீறி அங்கு த... மேலும் பார்க்க

"குஜராத் முதல்வராகும் வரை மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இல்லை" - தெலங்கானா CM கூறுவதென்ன?

பிரதமர் மோடி குஜராத் முதல்வராவதற்கு முன்பு வரை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (Backward Class) இல்லையென்றும், முதல்வரான பிறகு தன்னுடைய சமூகத்தை அந்தப் பட்டியலில் சேர்த்துக்கொண்டு தற்போது அவர்களுக்கெதிரான ... மேலும் பார்க்க