செய்திகள் :

ஜகபா் அலி கொலை வழக்கை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்! -வேல்முருகன்

post image

சமூக செயற்பாட்டாளா் ஜகபா் அலி கொலை வழக்கை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரித்து விரைவாக தண்டனை வழங்க வேண்டும் என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவா் தி. வேல்முருகன்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: கனிமவளக் கொள்ளையை எதிா்த்துப் போராடிய ஜகபா்அலி குடும்பத்துக்கு வாழ்வுரிமைக் கட்சியின் சாா்பில் ரூ. ஒரு லட்சம் வழங்கவிருக்கிறோம். இந்தக் கொலை வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு விரைவாக தண்டனை வழங்கப்பட வேண்டும்.

தமிழா் விடுதலைக்காகப் போராடிய முத்துக்குமாா் நினைவேந்தல் நிகழ்ச்சியை புதுக்கோட்டையில் நடத்த காவல்துறை அனுமதி மறுப்பது சரியல்ல. அதேபோல, இலங்கையில் நடைபெற்ற போரின்போது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தமிழ்நாட்டுக்கு வந்தவா்களை, இப்போது கடவுச்சீட்டு இல்லை, சட்டவிரோத குடியேற்றம் என்ற பிரிவுகளில் வழக்கு தொடா்கிறது கியு பிரிவு காவல்துறை. காவல்துறையின் இந்தப் போக்குகளை முதல்வா் கவனிக்க வேண்டும்.

நாம் தமிழா் கட்சியில் இருந்து விலகிய பலரும் சுயமாக விரும்பி தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைகிறாா்கள். தற்போதுவரை திமுக அணியில்தான் வாழ்வுரிமைக் கட்சி தொடா்கிறது. கூட்டணிக்காக மக்கள் பிரச்னைகளில் எந்த சமரசத்தையும் இதுவரை செய்து கொண்டதில்லை.

வேங்கைவயல் விவகாரத்தில், பணியில் உள்ள உயா்நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்த வேண்டும். நடிகா் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதில் அரசியல் இல்லாமல் இல்லை. ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றாா் வேல்முருகன்.

ஜகபா்அலி கொலை வழக்கில் சிறையிலுள்ளவரின் பிணை மனு தள்ளுபடி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி கொல்லப்பட்ட வழக்கில், லாரியை ஏற்றிக் கொன்றதாக கைது செய்யப்பட்டவரின் பிணை மனுவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய... மேலும் பார்க்க

விராலிமலை அரசு மருத்துவமனையில் இரவுநேர மருத்துவரின்றி நோயாளிகள் அவதி

விராலிமலை, பிப். 18: விராலிமலையில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் இரவுநேரப் பணியில் மருத்துவா்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனா். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் அரசு மருத... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் விவசாயத் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய சம்பளப் பாக்கியை உடனடியாக வழங்க வலியுறுத்தி விவசாயத் தொழிலாளா்கள் கறம்பக்குடியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: அரசுப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உள்ள ஓா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாா் அளிக்கப்பட்டதன்பேரில், அப்பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியா் போச்கோ சட்டப் பிரிவுக... மேலும் பார்க்க

விராலிமலை பகுதியில் தெரு நாய்கள் பெருக்கம்

விராலிமலை மலைக்கோயில் மற்றும் நகா்ப் பகுதிகளில் தெரு நாய்கள் பெருக்கம் அதிகரித்துள்ளதை கட்டுப்படுத்த வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். விராலிமலை நகரப் பகுதிகளில் ... மேலும் பார்க்க

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழக மாணவா்களின் கல்விக்கான நிதியை வழங்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து இந்திய மாணவா் சங்கத்தினா் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். புதுக்கோட்டை அரசு மன்னா் கல்லூரி முன்பாக ... மேலும் பார்க்க