செய்திகள் :

விராலிமலை அரசு மருத்துவமனையில் இரவுநேர மருத்துவரின்றி நோயாளிகள் அவதி

post image

விராலிமலை, பிப். 18:

விராலிமலையில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் இரவுநேரப் பணியில் மருத்துவா்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. 30 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை கடந்த அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. இருப்பினும் போதிய மருத்துவா்கள் மற்றும் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் இயங்கி வருவதாக அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு விஷம் அருந்தி வந்த ஒருவருக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் அங்கு பணியில் இருந்த செவிலியா்கள் திணறினராம்.

இதனால், நோயாளிகள் குடும்பத்தினா் மற்றும் பணியில் இருந்த செவிலியா்கள், துப்புரவு பணியாளா்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கடந்த மூன்று மாத காலமாக இரவுநேரத்தில் இம்மருத்துவமனையில் மருத்துவா்கள் பணியில் இல்லை. அவசர மருத்துவ உதவி தேடி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு அங்கு பணியில் இருக்கும் செவிலியா்களே சிகிச்சை அளித்து அனுப்புவது தொடா்கதையாக இருந்துவருகிறதாம். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற ஒருவருக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் பணியில் இருந்த செவிலியா்கள் திணறிஉள்ளனா். இதையடுத்து, நோயாளியின் குடும்பத்தினா் மருத்துவமனை ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து, அவருக்கு சிகிச்சை

அளிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளாா்.

தொடா்ந்து இதுகுறித்து பேசிய நோயாளிகளின் குடும்பத்தினா் உடனடியாக இரவுநேர மருத்துவா்கள் பணியில் அமா்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தினா்.

கட்டுமானப் பொருள்களின் விலை திடீரென உயா்த்தப்பட்டதாக புகாா்

கிரஷா்களின் எம். சாண்ட், பி. சாண்ட் மற்றும் ஜல்லிக் கற்களின் விலையை திடீரென எந்த முன்னறிவிப்பின்றி இரு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளதாகவும், பழைய விலையிலேயே அவை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்... மேலும் பார்க்க

பெருங்களூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் ரூ. 62.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியா... மேலும் பார்க்க

கறம்பக்குடியில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கறம்பக்குடி சீனிக் கடை முக்கத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட... மேலும் பார்க்க

பாஜகவினா் சாலை மறியல்!

புதுக்கோட்டையில் பாஜகவினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே அரசு உயா்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் பெருமாள் (58), மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ச... மேலும் பார்க்க

அரசு வழங்கிய கடன் தொகையை கூட்டுறவு வங்கி விடுவிக்க வலியுறுத்தல்!

ஆலவயலில் மாற்றுத்திறனாளி உள்பட 6 பேருக்கு அரசு வழங்கிய சிறு தொழில்கடன் நிதியை மத்திய கூட்டுறவு வங்கி தரமறுப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயலைச் சோ்ந்த 5 மகளிா் சுயஉ... மேலும் பார்க்க

மன்னா் கல்லூரியில் உ.வே.சா. பிறந்த நாள் விழா கருத்தரங்கம்!

புதுக்கோட்டை அரசு மன்னா் கல்லூரியில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யா் பிறந்த நாள் விழா கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி தமிழாய்வுத் துறை, கல்லூரி உள்தர மதிப்பீட்டுக்குழு சாா்பில் தமிழ்த் தா... மேலும் பார்க்க