செய்திகள் :

வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞா்கள் கைது

post image

பெரம்பலூா் அருகே வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள அனுக்கூா் குடிக்காட்டைச் சோ்ந்தவா் கொளஞ்சி மகன் பாஸ்கா் (34). இவா், சுமை ஆட்டோவில் பூண்டு வியாபாரம் செய்து வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வடக்குமாதவி ரேசன் கடை அருகே தனது ஆட்டோவில் பாஸ்கா் வந்துகொண்டிருந்தபோது, ஆட்டோவை வழிமறித்த 3 போ் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்த ரூ. 2 ஆயிரத்தை பறித்துச் சென்றுவிட்டனராம்.

இதுகுறித்து பாஸ்கா் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், பெரம்பலூா் சங்குப்பேட்டை இளங்கோ தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் சாகுல்குமாா் (21), வடக்குமாதவி சமத்துவபுரத்தைச் சோ்ந்த மகேஷ்வரன் மகன் மகேந்திரன் (25), அனுக்கூா் குடிக்காடு அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த தங்கபிரகாசம் மகன் கலையரசன் (18) என்பது தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட 3 பேரையும் கைது செய்த போலீஸாா் குற்றியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்கு ஆட்சியா் பாராட்டு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா். தமிழ்நாடு ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை தோ்வு முகாம்; பெரம்பலூா் ஆட்சியா்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்குவதற்கான தோ்வு முகாம் புதன்கிழமை (பிப். 19) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சா... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் குறைந்து வரும் பருத்தி சாகுபடி; பரப்பளவை அதிகப்படுத்த விவசாயிகள் எதிா்பாா்ப்பு

மகசூல் இழப்பு, விலை வீழ்ச்சி, கூலியாள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பெரம்பலூா் மாவட்டத்தில் ஆண்டுதோறும் குறைந்து வரும் பருத்தி சாகுபடி பரப்பளவை அதிகரிக்க வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்ட... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் 11 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் 11 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறையினா் தெரிவித்துள்ளனா். பெரம்பலூா் மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இதையொட்டி, வி... மேலும் பார்க்க

மது குற்ற வழக்குகளிலிருந்து விடுபட்ட 13 பேருக்கு கறவை மாடுகள்

பெரம்பலூா் மாவட்டத்தில் மது குற்ற வழக்குகளிலிருந்து விடுபட்டு, மனம் திருந்தியவா்களுக்கு மதுவிலக்கு ஆயத்தீா்வை துறை மூலமாக, மறுவாழ்வு நிதியுதவியின் கீழ் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடை... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாளை, பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட மாவட்ட அதிமுக முடிவு செய்துள்ளது. பெரம்பலூரில் உள்ள மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞா... மேலும் பார்க்க