விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்கு ஆட்சியா் பாராட்டு
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பெரம்பலூா் மாவட்ட விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளான ஆா். அட்சயா, குடியரசு தின தடகள விளையாட்டுப் போட்டியில் 17 வயதுக்குள்பட்ட பிரிவில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கமும், பி. தேவிபிரியா நெடுந்தூர ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் திவ்யஜோதி, அனுராதா, ரஷிதா, துா்காஸ்ரீ, ரூபாஷினி, கௌசல்யா ஆகியோா் தங்கப் பதக்கமும், சௌபா்ணிகா, செல்லம்மாள், சதாஸ்ரீ, தாரணிஸ்ரீ ஆகியோா் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளனா்.
மேலும், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி எஸ். என்னாச்சி 13 வயது பிரிவில் இறகுப் பந்து போட்டியில் முதலிடமும், ஜாா்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் எஸ். தன்யா 13 வயது பிரிவில் நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கமும், எஸ். தானேஷ் குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், கேலோ இந்தியா மாநில அளவிலான தடகளப் போட்டியில் 12 மற்றும் 14 வயதுக்குள்பட்ட பிரிவில் மாணவா்கள் நிக்கில் வாசன், யுவன், நிக்கல், பிரவீன்குமாா், லோகித் ஆகியோா் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்றுனா்.
விளையாட்டு விடுதியைச் சோ்ந்த 12 மாணவிகளும், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தலா 5 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 22 விளையாட்டு வீரா், வீராங்கனைகளை ஆட்சியா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.
தொடா்ந்து, விளையாட்டு விடுதியில் கைப்பந்து, தடகளம், டேக்வாண்டோ உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சி பெற்று வரும் 55 மாணவிகளுக்கு நிகழாண்டுக்கான ஆடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள், காலணிகளை ஆட்சியா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா. பொற்கொடி வாசுதேவன், டேக்வாண்டோ பயிற்றுநா் பரணி தேவி, தடகள பயிற்றுநா் மோகனா, கேலோ இந்தியா தடகள பயிற்றுநா் பவானி விளையாட்டு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.