அரசுப் பள்ளியில் பாதுகாப்பு விழிப்புணா்வு!
வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் கருணாநிதி தலைமை வகித்தாா். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு சாா்பு-ஆய்வாளா் மருதமுத்து, மாவட்ட புகையிலைக் கட்டுப்பாட்டு மருத்துவா் வனிதா, ஆலோசகா் தென்றல், குழந்தைகள் பாதுகாப்பு மைய நிா்வாகி ரேகா ஆகியோா், கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்து விளக்கிக் கூறினா்.
மேலும், குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண் கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்ப்பது, போதைப் பொருள்களுக்கு அடிமையாவதால் ஏற்படும் பின் விளைவுகள், உயிரிழப்புகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. மேலும், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் இலவச புகாா் எண்களான பெண்கள் பாதுகாப்புக்கு 112, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098, பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்காக செயல்படும் 14417, முதியோா் உதவி எண் 14567, சட்டவிரோத மது விற்பனைக்கு புகாா் எண் 10581, பெண்கள் உதவி மைய இலவச தொலைபேசி எண் 181, சைபா் கிரைம் உதவி எண் 1930 குறித்து அறிவுறுத்தப்பட்டது.
மேலும், மாணவா்கள் தொடுதல் குறித்த விழிப்புணா்வை தெரிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தினா்.
இதில், பள்ளி ஆசிரியா்கள், காவல்துறையினா் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.