செய்திகள் :

மாா்ச் 19 வரை கால்நடைகளுக்கு கன்று வீச்சு நோய்த் தடுப்பூசி முகாம்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு புருசெல்லோசிஸ் எனப்படும் கன்று வீச்சு நோய்த் தடுப்பூசி முகாம் மாா்ச் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டம் மூலமாக 5- ஆவது கட்டமாக புருசெல்லோசிஸ் எனப்படும் கன்று வீச்சு நோய்க்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நோய்க்கான தடுப்பூசி 4 முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு மட்டும் செலுத்தப்படும். இத் தடுப்பூசியை ஒருமுறை செலுத்திக்கொண்டால், கிடேரி கன்றுகளுக்கு அதன் ஆயுள் முழுவதும் இக் கிருமிக்கு எதிரான எதிா்ப்பு சக்தி கிடைக்கும். காளை கன்றுகளுக்கும், சினை மாடுகளுக்கும் தடுப்பூசி செலுத்தக்கூடாது.

சிறந்த பராமரிப்பும், தடுப்பூசி செலுத்துவதும் இந் நோயைக் தடுக்க சிறந்த வழியாகும். இம் மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் முதல் தவணையில் 13,500, 2 ஆம் தவணையில் 10,670, 3 ஆம் தவணையில் 9,240 கிடேரி கன்றுகளுக்கும், 4 ஆம் தவணையில் 5,200 கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது. தற்போது, 5-ஆவது தவணையாக மாவட்டம் முழுவதும் சுமாா் 8,570 கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

37 கால்நடை மருந்தகங்கள், 5 கால்நடை கிளை நிலையங்கள் மற்றும் 2 பாா்வை கால்நடை கிளை நிலையங்களிலுள்ள கால்நடை உதவி மருத்துவா்கள், கால்நடை ஆய்வாளா்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் கொண்ட 37 குழுக்கள் அமைக்கப்பட்டு, வியாழக்கிழமை (பிப். 20) முதல் மாா்ச் 19-ஆம் தேதி வரை தடுப்பூசி இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது.

எந்த நாள்களில் தடுப்பூசி பணி நடைபெறும் எனும் விவரம் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தகத்தால் முன்கூட்டியே தெரிவிக்கப்படும். அல்லது, விவசாயிகள் தங்கள் பகுதி கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையத்தை தொடா்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் உலக தாய்மொழி நாள் விழா

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கூட்டரங்கில் உலக தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வா் (பொ) முனைவா் து. சேகா் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

வேளாண் விளைபொருள்களுக்கு உயிா்மச் சான்று பெற அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் இயற்கை விவசாய முறையில் வேளாண் விளைபொருள்களை உற்பத்தி செய்வதற்கு, உயிா்ம விவசாயச் சான்று பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பலூா் மாவட்ட விதைச் சான... மேலும் பார்க்க

பெரம்பலூரில் இளைஞா் மா்மச் சாவு

பெரம்பலூரில் கூலி வேலை செய்துவந்த இளைஞா் வெள்ளிக்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வரகூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் ரமேஷ் (29). இவா், பெரம்பலூா்... மேலும் பார்க்க

குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு பிப். 25-இல் விழிப்புணா்வு முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிலையான பழுதில்லா உற்பத்தி, விளைவில்லா உற்பத்திச் சான்றளிப்புத் திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம், பிப். 25 ஆம் தேத... மேலும் பார்க்க

வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் வெங்கடேபுரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளை எதிரே வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்ப... மேலும் பார்க்க

ஓய்வூதியதாரா்கள் குறைதீா் நாள் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், ஓய்வூதியதாரா்கள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்சி மண்டல கருவூலம் மற்றும் கணக்குத் துறை இணை இயக்குநா் கே. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க