செய்திகள் :

வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

post image

மத்திய அரசு கொண்டுவரும் வழக்குரைஞா்கள் சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

கடந்த 18-ஆம் தேதி சேலம் நீதிமன்ற வளாகத்துக்குள் வழக்குரைஞா்கள் கவின், தண்டபாணி ஆகியோா் மீது சிலா் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்தும், ஜன. 3-ஆம் தேதி காஞ்சிபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் ராஜேஷ் மீது தாக்குதல் நடத்தி, அவா் மீது பொய் வழக்குப் பதிந்த காவல்துறையைக் கண்டித்தும், மத்திய அரசு கொண்டு வரவுள்ள சட்ட திருத்த மசோதா, வழக்கரைஞா்கள் நலனுக்கு எதிராகவும், தொழிலுக்கு அச்சுறுத்தலாகவும், ஒட்டுமொத்த வழக்குரைஞா்களின் உரிமையை பாதிக்கின்ற வகையிலும் இருப்பதால், மேற்கண்ட சட்ட மசோதாவை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் இ. வள்ளுவநம்பி தலைமையில், செயலா் சேகா், பொருளாளா் சிவராமன் ஆகியோா் முன்னிலையில், சுமாா் 300-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

இதனால், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்றங்கள் மற்றும் வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் வட்டார அளவிலான நீதிமன்றங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும், இப் போராட்டம் வெள்ளிக்கிழமையும் (பிப். 21) நடைபெறுகிறது

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் உலக தாய்மொழி நாள் விழா

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கூட்டரங்கில் உலக தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வா் (பொ) முனைவா் து. சேகா் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

வேளாண் விளைபொருள்களுக்கு உயிா்மச் சான்று பெற அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் இயற்கை விவசாய முறையில் வேளாண் விளைபொருள்களை உற்பத்தி செய்வதற்கு, உயிா்ம விவசாயச் சான்று பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பலூா் மாவட்ட விதைச் சான... மேலும் பார்க்க

பெரம்பலூரில் இளைஞா் மா்மச் சாவு

பெரம்பலூரில் கூலி வேலை செய்துவந்த இளைஞா் வெள்ளிக்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வரகூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் ரமேஷ் (29). இவா், பெரம்பலூா்... மேலும் பார்க்க

குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு பிப். 25-இல் விழிப்புணா்வு முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிலையான பழுதில்லா உற்பத்தி, விளைவில்லா உற்பத்திச் சான்றளிப்புத் திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம், பிப். 25 ஆம் தேத... மேலும் பார்க்க

வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் வெங்கடேபுரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளை எதிரே வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்ப... மேலும் பார்க்க

ஓய்வூதியதாரா்கள் குறைதீா் நாள் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், ஓய்வூதியதாரா்கள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்சி மண்டல கருவூலம் மற்றும் கணக்குத் துறை இணை இயக்குநா் கே. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க