செய்திகள் :

NEP: ``தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லையென்றால் நிதி கிடைக்காது" - மத்திய அமைச்சர் ஓப்பன் டாக்

post image

மத்திய அரசின் மும்மொழி கொள்கை உள்ளிட்ட காரணங்களால் தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு இன்னும் ஏற்காமல் இருக்கிறது. மேலும், தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால், கல்விக்கு மத்திய அரசு தரப்பில் ஒதுக்க வேண்டிய பாஜக அரசு ஒதுக்க மறுப்பதாக ஆளும் திமுக அரசு தொடர்ச்சியாகக் கூறிவருகிறது. இந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான், தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி கிடையாது என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

கல்விக் கொள்கை

வாரணாசியில் இன்று நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திரா பிரதான், ``உலகமே மாறிவரும் சூழலில் மும்மொழி கொள்கையைத் தமிழக அரசு ஏற்க மறுப்பதேன்? உள்ளூர் மொழிக்கே முதலிடம் என்கிற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறதா? அரசியல் காரணங்களுக்காகத் தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லையென்றால் இரண்டாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க சட்டத்தில் இடமில்லை." என்று கூறினார்.

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான்

மேலும், இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய தர்மேந்திரா பிரதான், ``காசி தமிழ் சங்கமம் மூலம் 'ஏக் பாரத் ஷ்ரேஷ்டா பாரத்' கலாசார பாரம்ர்யத்தில், புதிய அத்தியாயத்தைச் சேர்க்க பிரதமர் மோடி இலக்கு வைத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியை பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி மெட்ராஸ் இணைந்து கல்வித்துறை நடத்துகிறது" என்றார்.

CEC : அவசரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை தேர்தல் ஆணையர் - பின்னணி? | Vikatan | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* விகடன் இணையதளம் முடக்கம்: சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த ஆர்ப்பாட்டம்!* விகடன் இணையதளம் முடக்கம்: ``பாஜகவிற்கு எதிராக பெரு மூச்சு விடுவதையும் கூட...'' - இரா. மு... மேலும் பார்க்க

"தமிழ்நாடு இன்னொரு மொழிப்போரைச் சந்திக்கவும் தயங்காது..." - உதயநிதி எச்சரிக்கை!

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது.மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்' என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.மத்திய... மேலும் பார்க்க

`கேலிச்சித்திரத்துக்கு எதிரான அதிகார பிரயோகம் நகைச்சுவையாக மாறிவிடும்'- கார்ட்டூனிஸ்ட் பாலா

விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் சில நாள்களுக்கு முன்பு முடக்கப்... மேலும் பார்க்க

'ஒவ்வொரு தனிமனிதனின் சுதந்திரத்துக்கும் எதிரான தாக்குதல்!' - விகடன் குழும ஆசிரியர் அறிவழகன்

விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் சில நாள்களுக்கு முன்பு முடக்கப்... மேலும் பார்க்க